கோவை: பொள்ளாச்சி அருகே கஞ்சா விற்ற முதியவர் கைது: 200 கிராம் கஞ்சா பறிமுதல் - தாலுகா காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே கஞ்சா விற்ற முதியவர் கைது: 200 கிராம் கஞ்சா பறிமுதல் - தாலுகா காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆர்.பொன்னா புரம் சுற்றுவட்டாரப் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நரிக்குறவர் காலனி உள்ளிட்ட பகுதிகளில், நேற்று பொள்ளாச்சி தாலுகா போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த முதியவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். அவர் அதே பகுதியைச் சேர்ந்த சேகர்(70) என்பதும், அவரிடம் சோதனை நடத்தியதில் விற்பனைக்காகக் கஞ்சா வைத்து இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, அவரை கைது செய்த காவல்துறை வழக்குப்பதிவு செய்து 200-கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆர்.பொன்னா புரம் சுற்றுவட்டாரப் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நரிக்குறவர் காலனி உள்ளிட்ட பகுதிகளில், நேற்று பொள்ளாச்சி தாலுகா போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த முதியவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். அவர் அதே பகுதியைச் சேர்ந்த சேகர்(70) என்பதும், அவரிடம் சோதனை நடத்தியதில் விற்பனைக்காகக் கஞ்சா வைத்து இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, அவரை கைது செய்த காவல்துறை வழக்குப்பதிவு செய்து 200-கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.