கோவை: கோவை மாநகர் 15-காவல்நிலையங்களில் 300-கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 29-பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை: கோவை மாநகர் 15-காவல்நிலையங்களில் 300-கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 29-பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாநகர் உட்பட்ட பகுதியில் 15-காவல் நிலையங்கள் உள்ளன. காவல்துறை அதிரடியாக நேற்று முழுவதும் 15-காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சோதனை செய்தனர். இதில் 300-கிலோ 3000-புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு 29-பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாநகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஆர்.எஸ். புரம், காட்டூர், போத்தனூர், உக்கடம், குனியமுத்தூர், ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் காவல்துறை நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த29-பேரை காவல்துறை கைது செய்தனர். மேலும் கடைகளிலிருந்து 3-ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை காவல்துறை பறிமுதல் செய்தனர்.
இவை மொத்தம் 300-கிலோவாகும். இதுபோல் சிங்காநல்லூர் சரவணம்பட்டி ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 5-பேரை காவல்துறை கைது செய்து அவர்களிடமிருந்து 30-மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
கோவை மாநகர் உட்பட்ட பகுதியில் 15-காவல் நிலையங்கள் உள்ளன. காவல்துறை அதிரடியாக நேற்று முழுவதும் 15-காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சோதனை செய்தனர். இதில் 300-கிலோ 3000-புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு 29-பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாநகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஆர்.எஸ். புரம், காட்டூர், போத்தனூர், உக்கடம், குனியமுத்தூர், ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் காவல்துறை நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த29-பேரை காவல்துறை கைது செய்தனர். மேலும் கடைகளிலிருந்து 3-ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை காவல்துறை பறிமுதல் செய்தனர்.
இவை மொத்தம் 300-கிலோவாகும். இதுபோல் சிங்காநல்லூர் சரவணம்பட்டி ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 5-பேரை காவல்துறை கைது செய்து அவர்களிடமிருந்து 30-மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.