கோவையில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியர் சமீரன் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கல்.!!

கோவை: கோவையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் சமீரன் வழங்கினார்.


கோவை: கோவையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் சமீரன் வழங்கினார்.

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் இன்று ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் நடத்தப்பட்டது.

காது கேளாத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகளுக்குத் தனியார் நிறுவனங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட பணிகளுக்கான பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் சமீரன்வழங்கினார்.



கோவை மாவட்ட நிர்வாகம் தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து நடத்திய இந்த வேலைவாய்ப்பு முகாமில் காது கேட்காத, வாய் பேச முடியாத நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.

இந்த மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்ற தனியார் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான பணியாளர்களைத் தேர்வு செய்தனர். இந்த முகாமில் கலந்து கொண்ட கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தனியார் நிறுவனங்களில் பணிக்குத் தேர்வான மாற்றுத் திறனாளிகளுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.



பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் சமீரன், தன்னார்வ அமைப்புடன் இணைந்து இந்த வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுவதாகவும், இதில் காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் 25-பேருக்கு வேலைவாய்ப்பு தற்போது வரை பணி நியமன ஆணை வழங்கப்பட்டிருப்பதாகவும், மாலை வரை நடைபெறும் இந்த முகாமில் 50-பேர் வரை வேலை கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் தனியார் நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் நிரந்தரமாகமையம் ஒன்றை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்தார்.

மாற்றுத் திறனாளிகளுக்காகத் தனியாக வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. மகிழ்ச்சி அளிப்பதாகவும், தங்களுக்கு இதில் வேலை கிடைத்து இருப்பதன் மூலம் வருவாய் ஈட்ட வாய்ப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் மாற்றுத் திறனாளிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.



மேலும், கொரோனா காரணமாக வீட்டிலேயே மாற்றுத் திறனாளிகள் முடங்கிக் கிடந்த நிலையில் தற்போது வேலைவாய்ப்பு கிடைத்து இருப்பதன் மூலம் குடும்ப பிரச்சனைகளை தங்களால் சமாளிக்க இயலும் எனவும் மாற்றுத்திறனாளிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மாவட்ட நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு மாற்றுத்திறனாளிகளின் பெற்றோரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...