திருப்பூர்: கேஸ் சிலிண்டர் விலை, பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி உடுமலையில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர்: கேஸ் சிலிண்டர் விலை, பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உடுமலையில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பொதுமக்களை பாதிக்கும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை குறைக்க வேண்டும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை தடுக்க வேண்டும், பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசியை தடையில்லாமல் வழங்க வேண்டும், தங்கம்மாள் ஓடை பகுதியில் நடைபெறும் சாலை பராமரிப்பை விரைந்து முடிக்க வேண்டும், உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் திருப்பூர் மாவட்டம் உடுமலை தலைமை தபால் நிலையம் முன்பாக மத்திய அரசை கண்டித்து இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னதாக, குட்டை திடலில் முன்பாக இருந்து சிலிண்டரை பாடையில் கட்டி ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு தூக்கி வந்து, ஒப்பாரி வைத்து தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் மூர்த்தி, அமைப்பு சாரா தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் குணசேகரன், தமிழர் பண்பாட்டுப்பேரவை பால்நாராயணன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
பொதுமக்களை பாதிக்கும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை குறைக்க வேண்டும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை தடுக்க வேண்டும், பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசியை தடையில்லாமல் வழங்க வேண்டும், தங்கம்மாள் ஓடை பகுதியில் நடைபெறும் சாலை பராமரிப்பை விரைந்து முடிக்க வேண்டும், உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் திருப்பூர் மாவட்டம் உடுமலை தலைமை தபால் நிலையம் முன்பாக மத்திய அரசை கண்டித்து இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னதாக, குட்டை திடலில் முன்பாக இருந்து சிலிண்டரை பாடையில் கட்டி ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு தூக்கி வந்து, ஒப்பாரி வைத்து தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் மூர்த்தி, அமைப்பு சாரா தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் குணசேகரன், தமிழர் பண்பாட்டுப்பேரவை பால்நாராயணன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.