கோவை: வால்பாறை அருகே மரத்தின் மீது ஏறி கீழே இறங்க முடியாமல் தவித்து வரும் கரடியை காப்பாற்ற வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: வால்பாறை அருகே மரத்தின் மீது ஏறி கீழே இறங்க முடியாமல் தவித்து வரும் கரடியை காப்பாற்ற வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் சில தினங்களாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கரடி வில்லானி எஸ்டேட் பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளி ஒருவரை தாக்கி கொன்றது.
அதன்பிறகு, ஐயர்பாடி எஸ்டேட் பகுதியில் வீட்டிற்கு நடந்து சென்ற வாலிபரை கரடி தாக்கி படுகாயம் ஏற்படுத்தியது. இவ்வாறு பல்வேறு பகுதிகளில் கரடி நடமாட்டம் கண்டறியப்பட்டு வருகிறது கரடி நடமாட்டம் உள்ளதால் வனத்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
இந்த நிலையில், வால்பாறை அருகே இன்று வாட்டர்ஃபால் எஸ்டேட் பகுதியில் தேயிலை தோட்டத்தில் கரடி ஒன்று மரத்தின் மீது ஏறி நின்று சத்தம் போடுவதை அப்பகுதி பொதுமக்கள் பார்த்துள்ளனர்.

சில மணி நேரங்களாக மரத்தில் கரடி இருப்பதை கவனித்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்து, வனத்துறையினர் அப்பகுதிக்கு வந்து பார்த்ததில் கரடி மரத்தின் மீது ஏறி அதன் கை மரத்தின் கிளையில் மாட்டிக்கொண்டதால் கரடி கீழே இறங்க முடியாமல் தவிப்பது தெரியவந்தது.

பின்னர், வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு கரடியே மரத்திலிருந்து காப்பாற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மரத்தின் கீழ் தேயிலைத் தோட்டத்தில் மேலும் இரண்டு கரடிகள் சுற்றி வருவதால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.
மேலும், பொதுமக்களை கரடியை அருகில் செல்லாமல் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் சில தினங்களாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கரடி வில்லானி எஸ்டேட் பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளி ஒருவரை தாக்கி கொன்றது.
அதன்பிறகு, ஐயர்பாடி எஸ்டேட் பகுதியில் வீட்டிற்கு நடந்து சென்ற வாலிபரை கரடி தாக்கி படுகாயம் ஏற்படுத்தியது. இவ்வாறு பல்வேறு பகுதிகளில் கரடி நடமாட்டம் கண்டறியப்பட்டு வருகிறது கரடி நடமாட்டம் உள்ளதால் வனத்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
இந்த நிலையில், வால்பாறை அருகே இன்று வாட்டர்ஃபால் எஸ்டேட் பகுதியில் தேயிலை தோட்டத்தில் கரடி ஒன்று மரத்தின் மீது ஏறி நின்று சத்தம் போடுவதை அப்பகுதி பொதுமக்கள் பார்த்துள்ளனர்.
சில மணி நேரங்களாக மரத்தில் கரடி இருப்பதை கவனித்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்து, வனத்துறையினர் அப்பகுதிக்கு வந்து பார்த்ததில் கரடி மரத்தின் மீது ஏறி அதன் கை மரத்தின் கிளையில் மாட்டிக்கொண்டதால் கரடி கீழே இறங்க முடியாமல் தவிப்பது தெரியவந்தது.
பின்னர், வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு கரடியே மரத்திலிருந்து காப்பாற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மரத்தின் கீழ் தேயிலைத் தோட்டத்தில் மேலும் இரண்டு கரடிகள் சுற்றி வருவதால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.
மேலும், பொதுமக்களை கரடியை அருகில் செல்லாமல் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.