கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கோவையில் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் போதைப்பொருட்கள், போதை மாத்திரைகள், சூதாட்டம் உட்பட பல்வேறு சட்டவிரோத செயலில் நடைபெற்று வருகிறது. இதனை தடுப்பதற்காக மாநகர போலீசார் பல்வேறு தனிப்படைகளை அமைத்து நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்த நிலையில், கோவை குனியமுத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ய செய்து கொண்டிருந்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை குனியமுத்தூர் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் சின்னராஜ் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது இடையர்பாளையம் மணல் மார்க்கெட் பின் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர்.
இதையடுத்து, அவர்களை பிடித்து போலீசார் சோதனை நடத்தினர். அவர்களிடம் கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்கு இருந்தது தெரிய வந்தது.

தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியைச் சேர்ந்த அமானுல்லா என்பவரின் மகன் ஜோன்சா (36) மற்றும் அப்துல்லா என்பவரின் மகன் ஹக்கீம் (45) என்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அவர்களிடம் இருந்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவையில் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் போதைப்பொருட்கள், போதை மாத்திரைகள், சூதாட்டம் உட்பட பல்வேறு சட்டவிரோத செயலில் நடைபெற்று வருகிறது. இதனை தடுப்பதற்காக மாநகர போலீசார் பல்வேறு தனிப்படைகளை அமைத்து நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்த நிலையில், கோவை குனியமுத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ய செய்து கொண்டிருந்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை குனியமுத்தூர் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் சின்னராஜ் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது இடையர்பாளையம் மணல் மார்க்கெட் பின் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர்.
இதையடுத்து, அவர்களை பிடித்து போலீசார் சோதனை நடத்தினர். அவர்களிடம் கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்கு இருந்தது தெரிய வந்தது.
தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியைச் சேர்ந்த அமானுல்லா என்பவரின் மகன் ஜோன்சா (36) மற்றும் அப்துல்லா என்பவரின் மகன் ஹக்கீம் (45) என்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அவர்களிடம் இருந்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.