தொண்டாமுத்தூரை சேர்ந்த ஹரிவர்ஷினி ராஜேஷ் 'ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' சாதனை புரியும் முயற்சியில் 9-மணி நேரத்தில் 9-கதைகள் அடங்கிய 9-புத்தகங்களை 9-இடங்களில் வெளியீடு.!!

கோவை: கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த ஹரிவர்ஷினி ராஜேஷ் (வயது-9). இவர் ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை புரியும் முயற்சியில் 9-மணி நேரத்தில் 9-கதைகள் அடங்கிய 9-புத்தகங்களை 9-இடங்களில் வெளியிடுகிறார்.


கோவை: கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த ஹரிவர்ஷினி ராஜேஷ் (வயது-9). இவர் ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை புரியும் முயற்சியில் 9-மணி நேரத்தில் 9-கதைகள் அடங்கிய 9-புத்தகங்களை 9-இடங்களில் வெளியிடுகிறார்.



நான்காம் வகுப்பு படிக்கும் மாணவி ஹரிவர்ஷினி ராஜேஷ் கதைகள் கேட்பதிலும், கதைகளைச் சிறப்புடன் இயற்றுவதிலும் ஆர்வம் கொண்டவர். இந்நிலையில், ஏதேனும் சாதனைப் புரிய வேண்டும் என்ற நோக்கில் அவரது குடும்பத்தார் உதவியுடன் 9-புத்தகங்களை எழுதி வெளியிடும் முயற்சியை மேற்கொண்டுள்ளார்.



(குகைக்குள் பூதம், குக்கூ குக்கூ தவளை, மூணு கண்ண வந்துட்டான், ஐந்து பூதங்கள், காட்டுக்குள் திருவிழா, காண்டாமிருகம் எதுக்கு ஒடுது?, நிசாசினியின் மீன் பொம்மை, மேக்கப் போட்ட விலங்குகள், அரைப் பல்ல காணோம்) என்ற 9-புத்தகங்களை இவர் செயலி(Tamil typing APP) மூலம் வாசித்து அதனை பதிவு செய்துள்ளார்.

புத்தகங்களில் இடம்பெற்றுள்ள ஓவியங்களை இவரது அக்கா வர்த்தினி ராஜேஷ் வரைந்துள்ளார். ஒவ்வொரு புத்தகத்தின் பின் உள்ள QR கோர்டில் இவர் கதை சொல்லும் வீடியோ உள்ளது. இதனை இவரது தந்தை ராஜேஷ் உருவாக்கியுள்ளார்.



இதனையடுத்து, தற்போது இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனையில் இடம் பெரும் முயற்சியில் கோவையில் ஒன்பது இடங்களில் (கோனியம்மன் கோவில், சிங்காநல்லூர், விஜயா பதிப்பகம், ஐசிசி மருத்துவமனை, விஸ்டம் வோல்ட் மழலைப்பள்ளி, மருதமலை, பூண்டி, போளுவாம்பட்டி அங்காளம்மன் கோவில், பாரதியார் பல்கலைக்கழகம், ஸ்ரீவாரி கார்டன் இல்லம்) ஆகிய இடங்களில் பொதுமக்களிடம் வழங்குகிறார்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...