கோவை: கேரள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், கோவையில் உள்ள மலர் சந்தையில் பூக்கள் வாங்க மக்கள் கூட்டம் அலை மோதியது.
கோவை: கேரள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், கோவையில் உள்ள மலர் சந்தையில் பூக்கள் வாங்க மக்கள் கூட்டம் அலை மோதியது.
கோவையிலும், கோவை மாவட்டத்திலுள்ள தமிழக கேரள எல்லைப்பகுதி கிராமங்களிலும், ஓணம் பண்டிகை களை கட்டியுள்ளது. கோவை ரங்கேகவுடர் மற்றும் பெரியகடை வீதியிலுள்ள, பூக்கள், மளிகை மற்றும் காய்கறி மார்க்கெட்டில் நேற்று வியாபாரம் சூடுபிடித்தது.
கோவையிலிருந்து கேரளா மற்றும் தமிழக எல்லையிலுள்ள கிராமப்பகுதிகளுக்கு மளிகைப்பொருட்கள் லாரிகளில் கொண்டு செல்லப்பட்டது.
அதே போல் ஓணம் பண்டிகைக்குத் தேவையான பூக்கள் வாங்குவதற்குச் சந்தைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
மலர் சந்தையில் கூட்டம் அதிகமாகக் காணப்படும் கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் முககவசம், சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு செண்டு மல்லி கிலோ ரூ.160, செவந்தி கிலோ ரூ.100, முல்லை கிலோ ரூ. 1000, வாடாமல்லி கிலோ ரூ.320, வெள்ளை செவ்வந்தி ரூ.200, சிவப்பு ரோஜா கிலோ ரூ. 320, மல்லி கிலோ ரு.2000 சமங்கி கிலோ ரூ.200, கோழி கொண்டை கிலோ ரூ.160, தேன் செவ்வந்தி கிலோ ரூ.160, சிவப்பு ரோஜா 240, கலர் ரோஜா கிலோ 280, மஞ்சள் ரோஜா 320, ஹாஸ்டல் 320 அனைத்து பூக்களின் விலையும் 3 மடங்கு கூடியிருக்கிறது.
கொரோனா இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கு மற்றும் சில கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு அறிவித்த நிலையில், கோயில்களில் பூஜைகள் மட்டுமே நடத்த அனுமதிக்கப்பட்டதுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.
அதேபோல் கடந்த ஆடி மாதத்தில் ஆடிமாத விழாக்கள் கொண்டாடப்படாத நிலையில், தற்போது ஓணம் பண்டிகையை முன்னிட்டு சந்தையில் பூக்களின் விலையும் கிடுகிடு உயர்ந்திருந்தாலும் மக்கள் ஓணம் பண்டிகைக்காகப் பூக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.