கோவை: வால்பாறையில் நடைபெற்ற குற்றச் சம்பவங்கள் தடுப்பு பற்றிய ஆலோசனை கூட்டத்தில் காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்தார்.
கோவை: வால்பாறையில் நடைபெற்ற குற்ற சம்பவங்கள் தடுப்பு பற்றிய ஆலோசனை கூட்டத்தில் காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்தார்.
கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த சில தினங்களுக்கு முன் காவல் ஆய்வாளர் கற்பகம் தலைமையில் காவல்துறையினர் அதிரடியாக 3.700 கிலோ கிராம் கஞ்சாவை கைபற்றி யேசு என்ற நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனைத்தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற குற்றச் சம்பவங்கள் தடுப்பு பற்றிய ஆலோசனை கூட்டத்தில் வால்பாறை காவல் நிலையத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர் கற்பகம், உதவி ஆய்வாளர் கார்த்திகேயன், சிறப்பு உதவி ஆய்வாளர் பாலாஜி ஆகியோரை பாராட்டி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டி கௌரவித்தார். மேலும், தொடர்ந்து அவர்களின் பணி சிறக்க வாழ்த்தினார்.
கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த சில தினங்களுக்கு முன் காவல் ஆய்வாளர் கற்பகம் தலைமையில் காவல்துறையினர் அதிரடியாக 3.700 கிலோ கிராம் கஞ்சாவை கைபற்றி யேசு என்ற நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனைத்தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற குற்றச் சம்பவங்கள் தடுப்பு பற்றிய ஆலோசனை கூட்டத்தில் வால்பாறை காவல் நிலையத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர் கற்பகம், உதவி ஆய்வாளர் கார்த்திகேயன், சிறப்பு உதவி ஆய்வாளர் பாலாஜி ஆகியோரை பாராட்டி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டி கௌரவித்தார். மேலும், தொடர்ந்து அவர்களின் பணி சிறக்க வாழ்த்தினார்.