கோவை: கோவையில் தொடர்ந்து மருந்து சரக்கு விற்பனை செய்து வந்த குற்றவாளிகள் 1,850 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கோவை: கோவையில் தொடர்ந்து மருந்து சரக்கு விற்பனை செய்து வந்த குற்றவாளிகள் 1,850 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தொடர் மருந்து சரக்கு குற்றவாளிகளான சேட்டாராம் மாலிக் மற்றும் மோதிலால் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 1850 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
மேற்படி, நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் அவர்களின் பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் இ.ஆ.ப., அவர்கள் மேற்படி சேட்டாராம் மாலிக் மற்றும் மோதிலால் ஆகியோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.
மேற்படி உத்தரவின்படி சேட்டாராம் மாலிக் மற்றும் மோதிலால் ஆகியோரையை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தொடர் மருந்து சரக்கு குற்றவாளிகளான சேட்டாராம் மாலிக் மற்றும் மோதிலால் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 1850 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
மேற்படி, நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் அவர்களின் பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் இ.ஆ.ப., அவர்கள் மேற்படி சேட்டாராம் மாலிக் மற்றும் மோதிலால் ஆகியோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.
மேற்படி உத்தரவின்படி சேட்டாராம் மாலிக் மற்றும் மோதிலால் ஆகியோரையை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.