கொரோனா பேரிடர் காலங்களில் பொதுமக்களின் உயிர்காத்த டாக்டர் கிருஷ்ண நந்தா மாரடைப்பால் உயிரிழப்பு..!

கோவை: கோவையில் ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் பி கிருஷ்ண நந்தாவின் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவையில் ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் பி கிருஷ்ண நந்தாவின் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் பி கிருஷ்ண நந்தா (46). இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலை பொதுமக்களை அச்சுறுத்தி வந்த போது, அவர் பணியாற்றிய சிறப்பு மருத்துவமனையில் பல நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற பெரும் உதவிபுரிந்தார்.

இந்நிலையில், குடும்ப விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக தனது குடும்பத்துடன் அவர் சென்னையில் தங்கியிருந்த போது, அவருக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது.

இதையடுத்து, உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனிடையே, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யத் தயாராக இருந்த டாக்டர் கிருஷ்ண நந்தாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, மருத்துவமனை நிபுணர்கள் குழு அவருக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளித்தது. ஆனால், அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. டாக்டர் கிருஷ்ண நந்தா வியாழக்கிழமை மாலையில் பல உறுப்பு செயலிழப்பு அடைந்தது. இந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

கொரோனா நோய்த்தொற்று பரவல் காலங்களில் பொதுமக்கள் பலரின் உயிரை காப்பாற்றிய அவரின் உயிரிழப்பு செய்தி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...