கோவை: மறைந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 77 வது பிறந்த தினத்தையொட்டி டெல்லியில் உள்ள நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார். நாடு முழுவதும் அவரது பிறந்தநாளை, காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.
கோவை: மறைந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 77 வது பிறந்த தினத்தையொட்டி டெல்லியில் உள்ள நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார். நாடு முழுவதும் அவரது பிறந்தநாளை, காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.
அதன்படி, இன்று கோவை காங்கிரஸ் கட்சியினர், கோவை அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினர். இந்நிகழ்வில், முதல்கட்டமாக 20 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது.

மேலும், அக்கட்சியின் மாநில செயல்தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் ரத்ததான முகாம் துவக்கி வைக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ரத்ததானம் செய்தனர். முன்னதாக, அக்கட்சியின் கோவை மாவட்ட அலுவலகமான காமராஜ் பவனில் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.


அதன்படி, இன்று கோவை காங்கிரஸ் கட்சியினர், கோவை அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினர். இந்நிகழ்வில், முதல்கட்டமாக 20 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது.
மேலும், அக்கட்சியின் மாநில செயல்தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் ரத்ததான முகாம் துவக்கி வைக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ரத்ததானம் செய்தனர். முன்னதாக, அக்கட்சியின் கோவை மாவட்ட அலுவலகமான காமராஜ் பவனில் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.