வால்பாறை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு வழங்காமல் அழக்களிப்பு.!!

கோவை: வால்பாறை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு வழங்காமல் அழக்களிக்கப்படுவதால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: வால்பாறை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு வழங்காமல் அழக்களிக்கப்படுவதால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஒட்டுமொத்த மக்களின் மருத்துவச் சிகிச்சைக்காக முக்கிய மருத்துவமனையாக சுமார் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வால்பாறை அரசு மருத்துவமனை இருந்து வருகிறது.

இந்த மருத்துவமனையில் தற்போது போதிய மருத்துவர்கள் இருந்தும் சமையலர், இரவு காவலர் உள்ளிட்ட சுமார் பத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கடந்த பல ஆண்டு காலமாக பணியில் அமர்த்தப்படாமல் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் புறக்கணித்து வருகின்றனர்.

இதனால் நோயாளிகள் தொடர்ந்து பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர் இது சம்பந்தமாக அரசு அதிகாரிகள் முதல் அரசியல் பிரமுகர்கள் வரையிலும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாதிக்கப்பட்ட மக்களும் பலமுறை புகார் அளித்தும் யாரும் கண்டுகொள்ளாமலே காலம் கடந்து இதே நிலை நீடித்து வருகிறது.

மேலும் கடந்த பல மாதங்களாக மருத்துவமனையிலுள்ள உள்ள நோயாளிகளுக்குச் சமைத்து உணவு வழங்க முடியாத நிலையில் தினந்தோறும் யாராவது நல்ல உள்ளம் கொண்டவர்கள் நோயாளிகளுக்குக் காலை, மதியம், இரவு ஆகிய வேளைகளில் கடையில் காசு கொடுத்து உணவு வாங்கி வழங்கி வருவதாகவும், இதனால் சில நேரங்களில் தாமதமாக உணவு வழங்கும்போது மருத்துவர்களுடன் பொதுமக்களும் நோயாளிகளும் பெரும் வாக்குவாதத்தில் ஈடுபடும் நிலையும் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.

எனவே சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் வால்பாறை பகுதி ஒட்டு மொத்த மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு போதிய பணியாளர்களைத் தாமதமின்றி பணியமர்த்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...