கல்லூரி பேராசிரியர் வீட்டில் 50 சவரன் நகை கொள்ளை

கோவை அரசு தொழில் நுட்பக்கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிபவர் சேகர். இவரது மனைவி ராணி. இவர்கள் கல்லூரி வளாகத்தில் உள்ள அரசு குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் 27 ம் தேதி திண்டிவனத்தில் உள்ள உறவினர் இறந்ததால் சேகர் தனது குடும்பத்தோடு திண்டிவனம் புறப்பட்டுசென்றார்.  

தொடர்ந்து, இன்று காலை சேகர் மட்டும் வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் கதவு திறந்து கிடந்ததது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த சேகர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 50 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.   

இது தொடர்பாக, சாய்பாபா காலனி போலீசாருக்கு தகவல் தெரிக்கப்பட்டது. தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மோப்ப நாய்கள் மற்றும் கை ரேகை நிபுணர்களின் உதவியோடு தகவல்களை சேகரித்தனர். 

 இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 

இது தொடர்பாக காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பல நாட்கள் நோட்டமிட்ட பின்னரே இந்த கொள்ளைச் சம்பவம் நடைபெற்றுள்ளது. கல்லூரி வளாகத்தில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு காமிராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார். 

அரசு குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து 50 சவரன் நகை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியினரிடையே  பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...