வால்பாறையில் கஞ்சா விற்ற நபர் கைது.!! 3.700 கிலோ கஞ்சா பறிமுதல்.!!

வால்பாறை: வால்பாறையில் கஞ்சா விற்ற நபர் கைது 3.700 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


வால்பாறை: வால்பாறையில் கஞ்சா விற்ற நபர் கைது 3.700 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கஞ்சா விற்பதாகக் காவல் துறைக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் தலைமையில் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன், பாலாஜி மற்றும் காவல்துறையினர் நகரம் மற்றும் தேயிலைத் தோட்ட பகுதியில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.

அப்பொழுது புதுத்தோட்டம் எஸ்டேட்டில் 10 ஏக்கர் பகுதியில் புதுத் தோட்டம் எஸ்டேட்டை சேர்ந்த யேசு வயது 52. கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அவர் விற்பனைக்குக் கையில் வைத்திருந்த இரண்டு 100 கிராம் கஞ்சா கைப்பற்றப் பட்டது.

இதனைத் தொடர்ந்து அவர் வீட்டில் சோதனையிட்ட போது 3.500 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து யேசு மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்த காவல்துறையினர் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து விசாரணைக்குப் பின் வால்பாறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் காவலில் அவினாசி கிளை சிறைச்சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். வால்பாறையில் கஞ்சா கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் வால்பாறையில் தீவிர ரோந்து பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...