திருப்பூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் குவிந்த நூற்றுக்கணக்கான பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் குவிந்த நூற்றுக்கணக்கான பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு காரணமாகக் கடந்த சில வாரங்களாக மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறாத சூழ்நிலையில் கடந்த சில வாரங்களாக தொலைப்பேசி வாயிலாக மக்கள் குறைதீர் கூட்டங்கள் நடைபெற்று வந்தாலும் கூட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் நேரடியாக தங்கள் மனுக்களை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று திடீரென திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பிக்க ஒரே நேரத்தில் கூடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் கூட்டம் கூட்டமாகப் பொதுமக்கள் அமர்ந்திருந்தனர்.
இதனால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டதோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்கள் குறைதீர் கூட்டம் குறித்த முறையான அறிவிப்பு அல்லது சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் மாற்று ஏற்பாடு மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு காரணமாகக் கடந்த சில வாரங்களாக மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறாத சூழ்நிலையில் கடந்த சில வாரங்களாக தொலைப்பேசி வாயிலாக மக்கள் குறைதீர் கூட்டங்கள் நடைபெற்று வந்தாலும் கூட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் நேரடியாக தங்கள் மனுக்களை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று திடீரென திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பிக்க ஒரே நேரத்தில் கூடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் கூட்டம் கூட்டமாகப் பொதுமக்கள் அமர்ந்திருந்தனர்.
இதனால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டதோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்கள் குறைதீர் கூட்டம் குறித்த முறையான அறிவிப்பு அல்லது சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் மாற்று ஏற்பாடு மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.