பல்லடம் நீதிமன்றம் முன்பாக நான்கு குழந்தைகளுடன் தாய் தனது உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி.!!

திருப்பூர்: பல்லடம் நீதிமன்றம் முன்பாக நான்கு குழந்தைகளுடன் தாய் தனது உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: பல்லடம் நீதிமன்றம் முன்பாக நான்கு குழந்தைகளுடன் தாய் தனது உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் மங்கலம் சாலையில் உள்ளது ஒருங்கிணைந்த நீதிமன்றம். இந்த நீதிமன்றத்தின் முன்பாக நான்கு குழந்தைகளுடன் பெண் ஒருவர் திடீரென அவர் வைத்திருந்த கேனில் இருந்த பெட்ரோலை 4-பேர் மீதும் ஊற்றிக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.



இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெண்ணையும் குழந்தைகளையும் தண்ணீரை ஊற்றிக் காப்பாற்றினர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடம் விரைந்து சென்ற பல்லடம் காவல்துறை 108 ஆம்பூலென்சை வரவழைத்து அதில் ஏற்றிக்கொண்டு பல்லடம் அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு தாய் மற்றும் குழந்தைகளுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் தாய் மற்றும் குழந்தைகளை மீட்டு பல்லடம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அப்பெண் கும்பகோணத்தைச் சேர்ந்த துர்கா என்பதும் அவரது கணவர் சுதாகர், ராஜா(10) என்ற ஒரு மகனும் பூமா 5, அக்சயா 3, ரேவதி 10 மாதங்கள் ஆகிய மூன்று மகள்களும் இருப்பதும், கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு பல்லடம் அருகே மகாலட்சுமி நகரில் மேஸ்திரி ஈஸ்வரன் என்பவரது வீட்டில் 15 நாட்களே குடியிருந்து வந்த நிலையில் தனது கணவருடன் வேலைக்குச் சென்று வந்த வீட்டின் உரிமையாளர் ஈஸ்வரன் தனது கணவர் வேறு இடத்திற்கு வேலைக்குச் சென்றதால் உடனடியாக வீட்டை காலி செய்யுமாறு கூறி மிரட்டி வீட்டை காலி செய்ய வைத்துள்ளார்.

இதுகுறித்து பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

இந்நிலையில் தற்போது தனது கணவர் சுதாகர், மணி என்ற மேஸ்திரி உடன் பொங்கலூர் கொடுவாயில் கட்டிட வேலை செய்த வகையில் 15 நாட்களுக்கு உண்டான கூலியைக் கொடுக்காமலிருந்து வந்த நிலையில்,தற்போது பல்லடம் அருகே கே.என்.புரம் பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வருவதாகவும் இந்த நிலையில் நேற்று இரவு கொடுவாய் சேர்ந்த செல்வி செந்தில் மதி ஆகியோர் வீடு புகுந்து தங்களைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் பல்லடம் காவல்துறையின் நடவடிக்கையைக் கண்டித்து பல்லடம் மங்கலம் சாலையில் நீதிமன்ற வளாகம் முன்பாக பெட்ரோல் ஊத்தி தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றதும் தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து இச்சம்பவம் குறித்து பல்லடம் காவல்துறை இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் வீடு புகுந்து தாக்கியவர்கள் மற்றும் சம்பளப் பணம் கொடுக்காத மேஸ்திரிகள் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றார்.

பல்லடம் நீதிமன்ற வளாகம் முன்பாக வீடு புகுந்து தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத பல்லடவைத்ததாகவகண்டித்து தாய் தனது 4 குழந்தைகளுடன் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...