வர்தா புயல்; அரக்கோணத்தில் இருந்து சென்னை விரைந்துள்ளது பேரிடர் மீட்பு குழு

அதிதீவிர, 'வர்தா' புயல் சென்னை அருகே நாளை மதியம் கரையை கடக்க உள்ளதால், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உஷார் நிலையில் இருக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம், அரக்கோணத்தில் இருந்து பேரிடர் மீட்பு குழு சென்னை விரைந்துள்ளது. குறிப்பாக வட சென்னையில் மக்கள் உஷாராக இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் திருவள்ளூர், காஞ்சிபுரம், மகாபலிபுரம் பகுதிகளுக்கும் பேரிடர் மீட்பு குழுவினர் அனுப்பப்பட்டுள்ளனர். ஒரு குழுவிற்கு, 50 பேர் என, ஐந்து குழுக்கள் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வங்க கடலில் உருவான, 'வர்தா' புயல், இன்று காலை, 5:30 மணி நிலவரப்படி சென்னையில் இருந்து, 450 கி.மீ., தூரத்தில் மையம் கொண்டுள்ளது.

இந்த புயல், தெற்கு ஆந்திரா மற்றும் சென்னை இடையே நாளை மதியம் கரையை கடக்க கூடும். அப்போது மணிக்கு, 70 கி.மீ., முதல், 80 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...