கார்த்திகை பண்டிகையை முன்னிட்டு பூம்புகாரில் விளக்கு திருவிழா கண்காட்சி

கோவை, பெரியகடை வீதியில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் கார்த்திகை மாதம் தீபம் பண்டிகையை முன்னிட்டு விளக்கு திருவிழா கண்காட்சி மற்றும் சிறப்பு விற்பனையை இம்மாதம் துவங்கி உள்ளது. இதனை கோவை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலர் மதுராந்தகி குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார்.


பூம்புகார் விற்பனை நிலையம் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல், விநாயக சதுர்த்தி, விஜய தசமி, கிருஷ்ண ஜெயந்தி, கிறிஸ்துமஸ் போன்ற பல்வேறு பண்டிகை காலங்களில் கண்காட்சி மற்றும் விற்பனை நடத்தி வருகிறது. இதனையடுத்து கார்த்திகை மாதம் தீபம் பண்டிகையை முன்னிட்டு விளக்கு திருவிழா கண்காட்சி பண்டிகையை துவங்கி உள்ளது. இக்கண்காட்சி இம்மாதம் 17ம் தேதிவரை தினசரி கலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை நடைபெறுகிறது.


இக்கண்காட்சியில், பித்தளையில் காமாக்ஷி தீபம், நந்த தீபம், மலபார் தீபம், அஷ்டோத்திர தீபம், லக்ஷ்மி தீபம், அன்னம் மேஜை விளக்கு, அன்னம் தெலுங்கு விளக்கு, பாலாடை விளக்கு, லக்ஷ்மி தாமரை விளக்கு, அடுக்கு தீபம், குபேர தீபம் போன்ற இன்னும் ஏராளமான விளக்குகள் விற்பனைக்கு உள்ளன.

இது குறித்து மேலாளர் நரேந்திர போஸ் கூறுகையில்;

பூம்புகார் விற்பனை நிலையத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் விளக்கு திருவிழா கண்காட்சியில் பொதுமக்கள் அதிக அளவில் வந்த வண்ணம் உள்ளனர்.  கடந்த ஆண்டைவிட இந்த வருடம் 70 சதவீதத்திற்கும் மேல் வந்துள்ளனர். இந்த ஆண்டு விளக்கு திருவிழாவில் ரங்கநாதர் பித்தளை விளக்கு புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது அனைவரையும் கவர்ந்துள்ளது.



மேலும் பூம்புகார் விற்பனை நிலையத்தில் விற்பனை செய்யப்படும் கைவினைப் பொருட்கள் அனைத்தும் தரமுடையதாக இருப்பதால், பொதுமக்கள் நம்பிக்கையுடன் வாங்கி செல்கின்றனர். வாங்கும் பொருட்களுக்கு 20 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இக்கண்காட்சி மூலம் ரூபாய் 15 லட்சம் வரை விற்பனை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என அவர் தெரிவித்தார்.



Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...