கோவையில் தடையை மீறி மது விற்பனை செய்த 15 பேர் கைது.


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் மரணமடைந்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதிலும் உள்ள டாஸ்மாக் கடைகளை மூன்று நாட்கள் அடைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் கோவை மாவட்டத்தின் பல பகுதிகளில் தடையை மீறி, மது விற்பனை வெகு விமரிசையாக நடைபெற்றது. 

டாஸ்மாக்  கடைகளிலில் இருந்து சற்று தொலைவில் நின்று கொள்ளும் பார் ஊழியர்கள் மது பாட்டில்களை மறைத்து வைத்து வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்து வந்தனர். இதையறிந்த போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, பீளமேடு, ஆர்.எஸ்.புரம் , தொண்டாமுத்தூர், கருமத்தம்பட்டி உள்ளிட்ட 7 இடங்களில் தடையை மீறி மது விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.  

இதைத்தொடர்ந்து 15 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த 451 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து, போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இவ்வாறு விற்பனையாகும் மதுவை அருந்துபவர்கள் மது போதையில் தேவையில்லாத ரகளையில் ஈடுபட வாய்ப்பு உள்ளதால் உடனடியாக இந்த மூன்று நாட்களும் மது விற்பனை செய்பவர்களை போலீசார் கைது செய்ய வேண்டும் என கோவை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...