கோவை: வால்பாறையில், நீதிமன்ற உத்தரவுப்படி யானை வழித்தடங்களை கண்டறிந்து மீட்க, அரசு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவது இயற்கை ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: வால்பாறையில், நீதிமன்ற உத்தரவுப்படி யானை வழித்தடங்களை கண்டறிந்து மீட்க, அரசு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவது இயற்கை ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரு வனச்சரகங்களிலும், அதிக அளவில் யானைகள் உள்ளன. வால்பாறையில், யானைகள் ஆண்டாண்டு காலமாக நடந்து செல்லும் வழியை மறித்து, பல்வேறு எஸ்டேட்களில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது.
இதனிடையே, சமீப காலமாக யானை வழித்தடத்தில் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு 'சொகுசு' விடுதிகளும் கட்டப்பட்டுள்ளன. இது குறித்து, கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், கோவை மாவட்ட வனப்பகுதியில் யானைகள் வழித்தடம் அதிக அளவில் உள்ளன. யானைகள் வழித்தடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால், அவை திசை மாறி குடியிருப்பு பகுதிக்குள் நுழைகின்றன. எனவே யானைகள் வழித்தடத்தை கண்டறிந்து அவற்றை மீட்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், வால்பாறையில் உள்ள யானைகள் வழித்தடத்தை மீட்க வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், கடந்த வாரம் யானைகள் வழித்தடம் மீட்பது குறித்து, மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதிகாரிகளின் நடவடிக்கை இயற்கை ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஆட்சியர் தலைமையில் நடந்த கூட்டத்தில், யானைகள் வழித்தடத்தை கண்டறிந்து, அவற்றை வனப்பகுதியுடன் இணைக்க வேண்டும் என்று ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில், விரைவில் யானைகள் வழித்தடங்களை கண்டறிந்து மீட்கப்படும். வழித்தடம் மீட்கப்பட்டால், வால்பாறையில் வனவிலங்கு -- மனித மோதலுக்கு நிரந்தர தீர்வு காணமுடியும்,' என்றனர்.
ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரு வனச்சரகங்களிலும், அதிக அளவில் யானைகள் உள்ளன. வால்பாறையில், யானைகள் ஆண்டாண்டு காலமாக நடந்து செல்லும் வழியை மறித்து, பல்வேறு எஸ்டேட்களில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது.
இதனிடையே, சமீப காலமாக யானை வழித்தடத்தில் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு 'சொகுசு' விடுதிகளும் கட்டப்பட்டுள்ளன. இது குறித்து, கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், கோவை மாவட்ட வனப்பகுதியில் யானைகள் வழித்தடம் அதிக அளவில் உள்ளன. யானைகள் வழித்தடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால், அவை திசை மாறி குடியிருப்பு பகுதிக்குள் நுழைகின்றன. எனவே யானைகள் வழித்தடத்தை கண்டறிந்து அவற்றை மீட்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், வால்பாறையில் உள்ள யானைகள் வழித்தடத்தை மீட்க வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், கடந்த வாரம் யானைகள் வழித்தடம் மீட்பது குறித்து, மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதிகாரிகளின் நடவடிக்கை இயற்கை ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஆட்சியர் தலைமையில் நடந்த கூட்டத்தில், யானைகள் வழித்தடத்தை கண்டறிந்து, அவற்றை வனப்பகுதியுடன் இணைக்க வேண்டும் என்று ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில், விரைவில் யானைகள் வழித்தடங்களை கண்டறிந்து மீட்கப்படும். வழித்தடம் மீட்கப்பட்டால், வால்பாறையில் வனவிலங்கு -- மனித மோதலுக்கு நிரந்தர தீர்வு காணமுடியும்,' என்றனர்.