தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை பார்வையிட்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி




கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் பகுதியில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி மற்றும் அதிநவீன மின்னனு வாகனம் மூலம் சாதனை விளக்க குறும்படம் ஒளிபரப்பப்பட்டு வருவதை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பார்வையிட்டார். 



இந்த புகைப்படக் கண்காட்சியில் தேசிய தலைவர்கள் தமிழக முதலமைச்சரை சந்தித்து வளர்ச்சித் திட்டங்கள் குறித்த நிகழ்ச்சி புகைப்படங்களும், முதலமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்த நலத்திட்டங்கள், அரசு விழாக்கள், தமிழக அரசின் சிறப்புத்திட்டங்கள் உள்ளிட்ட அரசின் பல்வேறு சாதனைகளை விளக்கும் வகையில் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. இதனை அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் கண்டுரசித்தனர்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.கனகராஜ், அம்மன் கே.அர்ஜுனன், எட்டிமடை சண்முகம், கஸ்தூரிவாசு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ஆர்.ஏ.சக்திவேல், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லெ.பாண்டி, உதவி செய்திமக்கள் தொடர்பு அலுவலர் அ.சுகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...