கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள மாப்பிள்ளைகவுண்டன்புதூரில் இரண்டு ஆடுகளை திருடிய வாலிபர் கைது. மேலும், இருவர் தலைமறைவாகி உள்ளனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள மாப்பிள்ளைகவுண்டன்புதூரில் இரண்டு ஆடுகளை திருடிய வாலிபர் கைது. மேலும், இருவர் தலைமறைவாகி உள்ளனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள மாப்பிள்ளைகவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டசாமி(42). இவர் அதே பகுதியில் விவசாயம் மற்றும் ஆடு, மாடு வளர்க்கும் தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில், இவர் வழக்கம் போல கடந்த 19ம் தேதி தான் வளர்க்கும் 2 மாடுகளையும், 7 ஆடுகளையும் அடைத்துவிட்டு சென்றுள்ளார். மறுநாள் 20ம் தேதி காலை பட்டிக்கு சென்று பார்த்தபோது, இரண்டு ஆடுகள் திருடு போனது தெரியவந்தது.
இதையடுத்து, அவர் பொள்ளாச்சி வடக்கிபாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் ஆடு திருடர்களை தேடிவந்த போலீசார், நேற்று வடக்கிபாளையம் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த, சூலூர் பகுதியை சேர்ந்த கார்த்திக்(25), என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் மாப்பிள்ளைகவுண்டன்புதூரில் ஆடுகள் திருடிய சம்பவத்தில், ஈடுபட்டவர் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து, கார்த்திக் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து 12 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான இரண்டு ஆடுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், தலைமறைவாகி உள்ள அவரது கூட்டாளிகளான சரவணன்(25), முருகன்(24), ஆகியோரை தேடி வருகின்றனர்.