திருப்பூரில் கொரோனா தடுப்பூசிக்காக பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதை தவிர்க்க வாக்காளர் பட்டியல் அடிப்படையில் தடுப்பூசி!

திருப்பூர்: திருப்பூரில் கொரோனா தடுப்பூசிக்காக பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதை தவிர்க்கும் வகையில் வாக்குச் சாவடியில் உள்ள வாக்காளர் பட்டியல் அடிப்படையில் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது.


திருப்பூர்: திருப்பூரில் கொரோனா தடுப்பூசிக்காக பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதை தவிர்க்கும் வகையில் வாக்குச் சாவடியில் உள்ள வாக்காளர் பட்டியல் அடிப்படையில் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வந்த சூழ்நிலையில், உயிரிழப்பின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது. இச்சூழ்நிலையில் அவற்றை முறியடிக்க கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதே தீர்வு என மத்திய மாநில அரசுகள் சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த நிலையில், பொதுமக்கள் மத்தியில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான ஆர்வம் அதிகரித்தது.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்திலும் அதிக மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்த சூழ்நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அதிக நேரம் காத்திருப்பது, அலைக்கழிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் நடைபெற்ற சூழ்நிலையில் அவற்றை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வாக்குச்சாவடி வாரியாக தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டது.

அதன் அடிப்படையில், அந்தந்த வாக்குச் சாவடி மையங்களில் பொதுமக்களுக்கு டோக்கன் விநியோகம் செய்து குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட வாக்குச் சாவடியில் உள்ள வாக்காளர்கள் மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன் மூலம், பொது மக்கள் அலைக்கழிக்கப்படுவதை தவிர்க்கும் வகையிலும் முன்கூட்டியே பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் இன்று பல்வேறு வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

மேலும், இதனை கண்காணிக்கும் வகையில் சுகாதாரத் துறை அலுவலர்களோடு சேர்ந்து ஒவ்வொரு தடுப்பூசி மையத்திற்கும் ஒரு வருவாய் அலுவலரையும் நியமனம் செய்து மாவட்ட ஆட்சியர் வினீத் உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...