வால்பாறை நகராட்சி முன்னாள் ஆணையாளர் மீது மேலும் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

கோவை: கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி முன்னாள் ஆணையாளர் மீது மேலும் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி முன்னாள் ஆணையாளர் மீது மேலும் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் கடந்த 2019ம் ஆண்டு முதல் கடந்த மார்ச் மாதம் வரை ஆணையாளராக பணியாற்றியவர் பவுன்ராஜ். இவர் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தம் வழங்கியது மற்றும் 15.62 கோடியில் காசோலை கொடுத்தது உள்ளிட்டவற்றை மோசடி செய்ததாக குற்றப் பிரிவில் ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

தற்போது, தாவரவியல் பூங்கா பகுதியில் தடுப்பு சுவர் கட்ட பணிகளுக்கு 35.78 லட்சம் காசோலை வழங்கப்பட்டது. ஆனால், அந்த பணி செய்த நிறுவனத்திற்கு காசோலை வழங்காமல் வேறு ஒரு ஒப்பந்த நிறுவனத்திற்கு 17.87 லட்சம் வழங்கப்பட்டது. இதில் மணிக்குமார் என்ற ஒப்பந்ததாரருக்கு 17.91 லட்சம் காசோலை வழங்கி உள்ளார்.

தாவரவியல் பூங்கா பகுதியில் நடந்த பணிக்காக 35.78 லட்சத்தை சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனத்திற்கு வழங்காமல் கிரீன் பார்க் என்ற வேறு ஒரு ஒப்பந்த நிறுவனத்திற்கும், மணிக்குமாருக்கும் பவுன்ராஜ் முறைகேடாக வழங்கியதாக தற்போது வால்பாறை நகராட்சி ஆணையர் சுரேஷ்குமார் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில், வால்பாறை நகராட்சி முன்னாள் ஆணையாளர் பவுன்ராஜ், ஒப்பந்ததாரர் மணிக்குமார் ஒப்பந்த நிறுவனங்களுக்கு பில் தொகை பெற்று வழங்கும் பொறுப்பில் உள்ள வால்பாறை நகராட்சி மேலாளர் நஞ்சுண்டன் மற்றும் கிரீன்பார்க் ஒப்பந்தம் நிறுவன உரிமையாளர் ஆகிய 4 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு துணை சூப்பிரண்டு சேகர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் யமுனாதேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...