கோவை: கிணத்துக்கடவு தொகுதி அரிசிபாளையம் பொது சுகாதார மையத்தில் கொரோனா பெருந்தொற்று நடவடிக்கையாகத் தடுப்பூசி போடும் பணியை எம்எல்ஏ தாமோதரன் ஆய்வு செய்தார்.
கோவை: கிணத்துக்கடவு தொகுதி அரிசிபாளையம் பொது சுகாதார மையத்தில் கொரோனா பெருந்தொற்று நடவடிக்கையாகத் தடுப்பூசி போடும் பணியை எம்எல்ஏ தாமோதரன் ஆய்வு செய்தார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட அரிசிபாளையம் பகுதியிலுள்ள பொது சுகாதார நிலையத்தில் இன்று கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, அங்கு கொரோனா பெருந்தொற்றுத் தடுப்பு ஊசி போடப்பட்டு வரும் பணிகளைப் பார்வையிட்டுத் தட்டுப்பாடு இல்லாமல் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும், பொது சுகாதார நிலையத்தில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். இந்நிகழ்வின்போது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட அரிசிபாளையம் பகுதியிலுள்ள பொது சுகாதார நிலையத்தில் இன்று கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, அங்கு கொரோனா பெருந்தொற்றுத் தடுப்பு ஊசி போடப்பட்டு வரும் பணிகளைப் பார்வையிட்டுத் தட்டுப்பாடு இல்லாமல் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும், பொது சுகாதார நிலையத்தில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். இந்நிகழ்வின்போது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.