திருப்பூர்: திருப்பூர் மாவட்ட காவல் துறை சார்பாக, திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டர்கள் மாநில செய்தித் துறை அமைச்சர் மூலமாக வழங்கப்பட்டது..
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட காவல் துறை சார்பாக, திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டர்கள் மாநில செய்தித் துறை அமைச்சர் மூலமாக வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் துறை சார்பாக ஒரு நிமிடத்திற்கு 5 லிட்டர் ஆக்சிஜனை செறிவூட்டக் கூடிய திறன் கொண்ட 10 ஆக்சிஜன் சிலிண்டர்களை திருப்பூர் மாவட்ட காவல் துறை சார்பாக திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்ட காவல் துறை சார்பாக வழங்கப்பட்ட ஆக்சிஜன் சிலிண்டர்களை செய்தித்துறை அமைச்சர் மூலமாக மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், விரைவில் திருப்பூர் மாவட்டம் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறும் எனவும் அதற்கு பொதுமக்கள் முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட சுகாதாரத் துறையின் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், கோவை மண்டல காவல்துறை தலைவர் சுதாகர், மாவட்ட ஆட்சியர் வினீத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் துறை சார்பாக ஒரு நிமிடத்திற்கு 5 லிட்டர் ஆக்சிஜனை செறிவூட்டக் கூடிய திறன் கொண்ட 10 ஆக்சிஜன் சிலிண்டர்களை திருப்பூர் மாவட்ட காவல் துறை சார்பாக திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்ட காவல் துறை சார்பாக வழங்கப்பட்ட ஆக்சிஜன் சிலிண்டர்களை செய்தித்துறை அமைச்சர் மூலமாக மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், விரைவில் திருப்பூர் மாவட்டம் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறும் எனவும் அதற்கு பொதுமக்கள் முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட சுகாதாரத் துறையின் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், கோவை மண்டல காவல்துறை தலைவர் சுதாகர், மாவட்ட ஆட்சியர் வினீத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.