ஊரடங்கு விதிமீறல்: கோவையில் ப்ரூக்ஃபீல்ட்ஸ் மாலுக்கு 55 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பு!

கோவை: கோவையில் ஊரடங்கு விதிமுறைகளை கடைபிடிக்காத பிரபல மாலுக்கு மாநகராட்சி அதிகாரிகள் 55 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.


கோவை: கோவையில் ஊரடங்கு விதிமுறைகளை கடைபிடிக்காத பிரபல மாலுக்கு மாநகராட்சி அதிகாரிகள் 55 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் இயங்கி வரும் பிரபலமான அடுக்குமாடி வணிக வளாகம் ஊரடங்கு விதிகளை கடைப்பிடிக்காமல் செயல்பட்டதால் மாநகராட்சி அதிகாரிகள் 55 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

தமிழகத்தில் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மால்களில் உள்ள கடைகள் செயல்பட தமிழக அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில், கோவை மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 25வது வார்டு கிருஷ்ணசாமி சாலையில் ப்ரூக்ஃபீல்ட்ஸ் மால் உள்ளது. இந்த மாலில் ஊரடங்கு அமலில் உள்ள காலகட்டத்திலும் உணவுக் கூடங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அங்கு பறக்கும் படையினர் சோதனையிட மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டார். இதன் பேரில் நேற்று பறக்கும் படையினர் சம்பந்தப்பட்ட வணிக வளாகத்திற்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 10 உணவுக் கூடங்கள் திறந்து வைக்கப்பட்டு விற்பனை நடைபெற்றுக் கொண்டு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அனைத்து உணவு கடைகளையும் மூடச் சொல்லி உத்தரவிட்ட அதிகாரிகள், ஒவ்வொரு கடைக்கும் 5 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமாக விதித்தனர் . மொத்தம் 55 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...