முதலமைச்சர் குறித்து முகநூலில் அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுகவினர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு!

கோவை: தி.மு.க., முன்னணி தலைவர்களின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் முகநூலில் அவதூறு தகவல்களை பகிர்ந்த நபர் மீது, தகுந்த நடவடிக்கை எடுக்க கோரி திமுகவினர் காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.


கோவை: தி.மு.க., முன்னணி தலைவர்களின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் முகநூலில் அவதூறு தகவல்களை பகிர்ந்த நபர் மீது, தகுந்த நடவடிக்கை எடுக்க கோரி திமுகவினர் காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.

கோவை மாவட்டம், குனியமுத்தூர், மின் நகரை சேர்ந்தவர் லோகநாதன் தி.மு.க., குனியமுத்தூர் பகுதி பொறுப்பாளர். இவர் நேற்று காலை கட்சியினருடன், கோவை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

இந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, முகநூலில் கனிமொழியின் காதலன் என்ற பக்கத்தில், எங்கள் கட்சி தலைவர்களின் பெயர்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் குனியமுத்தூர், நரசிம்மபுரம், கிருஷ்ணசாமி நகரை சேர்ந்த அ.தி.மு.க., குனியமுத்தூர் பகுதி பொருளாளர் சுரேஷ் பாபு, முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின், எம்.பி., கனிமொழி, தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், எம்.பி., ராசா ஆகியோர் குறித்து, அவதூறான தகவல்களை பரப்பியுள்ளனர்.

இப்பதிவுகள் பொதுமக்களிடையே, தி.மு.க., முன்னணி தலைவர்களின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் முறையில் அமைந்துள்ளது. இதுபோன்ற அவதூறு தகவல்களை பகிர்ந்த நபர் மீது, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...