திருமண செலவு தொகையை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு அளித்த திருப்பூர் புதுமணத்தம்பதி!

திருப்பூர்: திருப்பூரில் ஊரடங்கு காரணமாக எளிமையாக திருமணம் நடைபெற்றதால், திருமண செலவு தொகையை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக புதுமணதம்பதி கொடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: திருப்பூரில் ஊரடங்கு காரணமாக எளிமையாக திருமணம் நடைபெற்றதால், திருமண செலவு தொகையை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக புதுமணதம்பதி கொடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரை சேர்ந்த தொழிலதிபர் அருள்செல்வம். இவரது 2வது மகன் அருள் பிரனேஷ். இவருக்கும் திருப்பூர், விகாஸ் வித்யாலயா, வித்யாசாகர் குழுமத்தை சேர்ந்த கவுரிசங்கர் - கவிதா தம்பதியின் மகள் அனு என்பவருக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டது.



கடந்த 14 ஆம் தேதி காங்கயம் - வட்டமலை அங்காளம்மன் கோவிலில் கொரோனா விழிப்புணர்வு விதிமுறைகளுக்கு உட்பட்டு எளிமையாக திருமணம் நடந்தது. திருமணத்தை எளிமையாக நடத்தியதால், திருமண செலவுக்கு திட்டமிட்டிருந்த பணத்தை நற்பணிகளுக்கு தர மணமக்களின் வீட்டார் முடிவு செய்தனர்.

இது குறித்து பேசிய மணமகனின் தந்தை, “திருமண செலவுக்கு ஒதுக்கிய நிதியில் தற்போதைக்கு ரூ.37.66 லட்சத்தை பல நற்பணிகளுக்காக கொடுத்துள்ளோம். ரூ.50 லட்சம் இலக்கு என்ற வகையில் மீத தொகையையும் கூடிய விரைவில் நற்பணியாக கொடுக்க உள்ளோம்,” என்று கூறினார்.

திருமணம் முடிந்த கையோடு, திருப்பூர் அரசு மருத்துவமனை எதிரே உள்ள ரோட்டரி கொரோனா கேர் சென்டருக்கு ரூ. 5 லட்சம், பெருந்துறை மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கொரோனா மையத்திற்கு ரூ.11 லட்சம், புஞ்சை புளியம்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் கட்டமைக்கப்படும் முதியோர் இல்லத்திற்கு ரூ. 2 லட்சம் ரூபாய் வழங்கி உள்ளார்.

மேலும் திருப்பூர் வடக்கு ரோட்டரி சங்கம் சார்பில் பல்லடம் அரசு மருத்துவமனையில் உள்ள சிகிச்சை மையத்திற்கு ஐ.சி.யு., யூனிட் அமைக்க, 7.66 லட்சம், மருத்துவ செலவினங்களை எதிர்கொள்ள முடியாமல் தத்தளிக்கும், 8 குடும்பங்களுக்கு, 7 லட்சம் எனவும் மணமகனின் தந்தை கொடுத்துள்ளார்.



இது தவிர மங்களம் ரோடு பாரபழையம் அரசு பள்ளிக்கு கட்டிடம் கட்ட 5 லட்சம் என, மொத்தமாக 37.66 லட்சம் ரூபாயை வழங்கியுள்ளனர். திருமணத்தில் மீதமான தொகையை பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு வழங்கியுள்ள மணமக்களின் குடும்பத்தினரின் செயலை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...