கோவை: கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கையாக கிணத்துக்கடவு தொகுதியில் கூடுதல் தடுப்பூசி மையம் அமைக்க வேண்டும் என மாவட்ட சுகாதார இணை இயக்குநரிடம் திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் வலியுறுத்தியுள்ளார்.
கோவை: கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கையாக கிணத்துக்கடவு தொகுதியில் கூடுதல் தடுப்பூசி மையம் அமைக்க வேண்டும் என மாவட்ட சுகாதார இணை இயக்குநரிடம் திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் வலியுறுத்தியுள்ளார்.

கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் இன்று கோவை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் செந்தில்குமாரை சந்தித்து, கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கூடுதல் தடுப்பூசி மையம் அமைக்கக் கோரி மனு அளித்தார்.
‘‘கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட சுந்தராபுரம், ஈச்சனாரி, மதுக்கரை, மலுமிச்சம்பட்டி, எட்டிமடை, தீத்திபாளையம் ஆகிய இடங்களில் கூடுதல் தடுப்பூசி மையம் அமைக்க வேண்டும்.

மேலும், வெள்ளலூர், செட்டிபாளையம், மயிலேரிபாளையம் பகுதிகளில் உள்ள தடுப்பூசி மையங்களுக்கு கூடுதல் தடுப்பூசி வழங்க வேண்டும்'' என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட சுகாதார இணை இயக்குநர் செந்தில்குமார், ‘‘கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றப்படும்'' என்று உறுதி அளித்துள்ளார்.
கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் இன்று கோவை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் செந்தில்குமாரை சந்தித்து, கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கூடுதல் தடுப்பூசி மையம் அமைக்கக் கோரி மனு அளித்தார்.
‘‘கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட சுந்தராபுரம், ஈச்சனாரி, மதுக்கரை, மலுமிச்சம்பட்டி, எட்டிமடை, தீத்திபாளையம் ஆகிய இடங்களில் கூடுதல் தடுப்பூசி மையம் அமைக்க வேண்டும்.
மேலும், வெள்ளலூர், செட்டிபாளையம், மயிலேரிபாளையம் பகுதிகளில் உள்ள தடுப்பூசி மையங்களுக்கு கூடுதல் தடுப்பூசி வழங்க வேண்டும்'' என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட சுகாதார இணை இயக்குநர் செந்தில்குமார், ‘‘கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றப்படும்'' என்று உறுதி அளித்துள்ளார்.