கோவை: கல்லூரி பேராசிரியர் வீட்டில் ரூ.10,000 மதிப்பிலான வெள்ளிப்பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
கோவை: கல்லூரி பேராசிரியர் வீட்டில் ரூ.10,000 மதிப்பிலான வெள்ளிப்பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
கோவை பீளமேடு அருகே உள்ள சேரன்மாநகர் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் 35, இவர் ஒரு தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலை செய்து வருகிறார்.
இவர் அண்மையில் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் தண்ணீர் பந்தல் ரோட்டில் உள்ள தனது உறவினர் வீட்டிற்குச் சென்றார்.
இன்று வீடு திரும்பிய ராமகிருஷ்ணன் வீட்டின் முன்பக்க கதவை உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த வெள்ளித் தட்டு வெள்ளி குத்து விளக்கு பட்டு சேலை உட்பட 10 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டு இருப்பது தெரிந்தது.
இதுபற்றி பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
கோவை பீளமேடு அருகே உள்ள சேரன்மாநகர் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் 35, இவர் ஒரு தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலை செய்து வருகிறார்.
இவர் அண்மையில் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் தண்ணீர் பந்தல் ரோட்டில் உள்ள தனது உறவினர் வீட்டிற்குச் சென்றார்.
இன்று வீடு திரும்பிய ராமகிருஷ்ணன் வீட்டின் முன்பக்க கதவை உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த வெள்ளித் தட்டு வெள்ளி குத்து விளக்கு பட்டு சேலை உட்பட 10 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டு இருப்பது தெரிந்தது.
இதுபற்றி பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.