கோவை: ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு பொதுப்போக்குவரத்து இயங்க அனுமதி அளித்தால், கோவை கோட்டத்தில் இருந்து 1070 அரசு பேருந்துகளை இயக்க கோவை அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது எனவும் அந்த பேருந்துகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது என போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
கோவை: ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு பொதுப்போக்குவரத்து இயங்க அனுமதி அளித்தால், கோவை கோட்டத்தில் இருந்து 1070 அரசு பேருந்துகளை இயக்க கோவை அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது எனவும் அந்த பேருந்துகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது என போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த மே மாதம் முதல், அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் இயக்கம் முழுவதுமாக நிறுத்தப்பட்டது. பொதுப் போக்குவரத்து சேவைகள் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதனிடையே, ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிக்கப்பட்டு பொதுப்போக்குவரத்து துவங்க அனுமதி அளிக்கப்பட்டால் கோவை கோட்டத்தில் இருந்து 1070 பேருந்துகளை இயக்க கோவை அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து கோவை அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ கோவை கோட்டத்தில் உள்ள பணிமனைகளில் உள்ள அரசு பேருந்துகளின் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பெரும்பாலான பேருந்துகளின் பாராமரிப்பு பணிகள் முடிவடைந்து இயங்க தயார் நிலையில் உள்ளது. அரசு பேருந்துகள் இயங்க அனுமதி அளித்தால் கோவை கோட்டத்தில் 1070 பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளோம். பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்,’’ என்றார்.