கோவை மாநகராட்சியில்‌ சீர்மிகு நகர திட்டத்தின்கீழ்‌ புனரமைக்கப்பட்ட குளங்களை மாநகராட்சி ஆணையாளர்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு..!

கோவை: கோவை மாநகராட்சியில்‌ சீர்மிகு நகர திட்டத்தின்கீழ்‌ புனரமைக்கப்பட்ட உக்கடம்‌ பெரியகுளம்‌, செல்வசிந்தாமணி குளம்‌, புனரமைக்கப்பட்டுவரும்‌ வாலாங்குளம்‌ ஆகிய குளங்களை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப., நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார். களப்பணியாளர்கள்‌ அனைவரும்‌ தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள்‌ விடுத்தார்.


கோவை: கோவை மாநகராட்சியில்‌ சீர்மிகு நகர திட்டத்தின்கீழ்‌ புனரமைக்கப்பட்ட உக்கடம்‌ பெரியகுளம்‌, செல்வசிந்தாமணி குளம்‌, புனரமைக்கப்பட்டுவரும்‌ வாலாங்குளம்‌ ஆகிய குளங்களை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப., நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார். களப்பணியாளர்கள்‌ அனைவரும்‌ தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள்‌ விடுத்தார்.



கோவை மாநகராட்சியில்‌ சீர்மிகு நகர திட்டத்தின்கீழ்‌ புனரமைக்கப்பட்ட உக்கடம்‌ பெரியகுளம்‌, செல்வசிந்தாமணி குளம்‌, புனரமைக்கப்பட்டுவரும்‌ வாலாங்குளம்‌ ஆகிய குளங்களை ஆய்வு செய்ததோடு, மத்திய மண்டலம்‌ கெம்பட்டி காலனி மாநகராட்சி இருபாலார்‌ மேல்நிலைப்பள்ளியில்‌ கொரோனா தடுப்புப் பணிகளில்‌ ஈடுபடும்‌ களப்பணியாளர்கள்‌ மேற்கொள்ளப்பட்டுவரும்‌ பணிகள்‌ குறித்தும் மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனிஅலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப., இன்று (16.06.2021) ஆய்வு மேற்கொண்டார்.



கோவை மாநகராட்சியில்‌ சீர்மிகு நகர திட்டத்தின்கீழ்‌ ரூ.62.17 கோடி மதிப்பீட்டில்‌ புனரமைக்கப்பட்ட உக்கடம்‌ பெரியகுளத்தினையும்‌, ரூ.31.47 கோடி மதிப்பீட்டில்‌ புனரமைக்கப்பட்ட செல்வசிந்தாமணி குளத்தினையும்‌, ரூ.67.86 கோடி மதிப்பீட்டில்‌ புனரமைக்கப்பட்டுவரும்‌ வாலாங்குளம்‌ ஆகிய குளங்களை பார்வையிட்ட ஆணையாளா்‌ அவாகள்‌, குளத்தின்‌ கரையின்‌ மீது நடைப்பயிற்சி பாதை, மிதிவண்டி பாதை, இருக்கைகள்‌, சூரிய மின்சக்தி மேற்கூரை அமைப்புடன்‌ கூடிய நிழல்‌ இருக்கைகள்‌ மற்றும்‌ நிழற்குடைகள்‌ அமைக்கப்பட்டுள்ளதையும்‌, மேலும்‌, திறந்தவெளி அரங்கம்‌, விளையாட்டுக்‌ திடல்‌, உணவுக்கூடங்கள்‌, கழிப்பறைகள்‌, திறந்தவெளி உடற்பயிற்சி நிலையங்கள்‌, படகுத்துறை, மிதவை உணவகம்‌, பாதுகாப்பு கேமராக்கள்‌, LED விளக்குகள்‌, பறவைகளை பார்வையிட பார்வை கோபுரம்‌, வாகனங்கள்‌ நிறுத்தும்‌ வசதிகள்‌ ஆகியவை அமைக்கப்பட்டுள்ளதையும்‌, கரை முழுவதும்‌ இயற்கையான கற்பாறைகள்‌, அழகு செடிகளுடன்‌ உருவாக்கப்பட்டுள்ளதையும்‌.



மிதவை மற்றும்‌ விளையாட்டு மைதானம்‌ ஆகிய வசதிகள்‌ மேற்கொள்ளப்பட்டுள்ளதையும்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



தொடாந்து, மத்திய மண்டலம்‌ கெம்பட்டி காலனியில்‌ உள்ள மாநகராட்சி இருபாலார்‌ மேல்நிலைப்பள்ளி வளாகத்தில்‌ களப்பணியாளாகள்‌ வீடு வீடாகச்‌ சென்று பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல்‌, இருமல்‌ பரிசோதனை, உடல்‌ வெப்பநிலை பரிசோதனை, பல்ஸ்‌ ஆக்ஸி மீட்டர் மூலம்‌ உடல்‌ ஆக்சிஜன்‌ அளவை கண்டறிதல்‌ ஆகிய பணிகள்‌ மேற்கொள்ளப்படுவதன்‌ நேரடி செயல்விளக்கத்தை கேட்டறிந்த பின்னர்‌, களப்பணியாளர்கள்‌ அனைவரும்‌ தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்‌ என அறிவுரைகள்‌ வழங்கினார்.



இந்தநிகழ்ச்சியில்‌ உதவி ஆணையாளர்‌ (மத்தியம்‌) சிவசுப்பிரமணியம்‌, உதவி செயற்பொறியாளர்‌ கருப்புசாமி, உதவி செயற்பொறியாளர்‌ கமலக்கண்ணன்‌, உதவி பொறியாளர்‌ சரவணன்‌, மண்டல சுகாதார அலுவலர்‌ இராதாகிருஷ்ணன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...