கோவை: கோவையில் வங்கியில் ரூ.6 கோடிக்கான செக்கை கொடுத்து மோசடியில் ஈடுபட முயன்ற நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை: கோவையில் வங்கியில் ரூ.6 கோடிக்கான செக்கை கொடுத்து மோசடியில் ஈடுபட முயன்ற நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவைப்புதூா் மீனாட்சி நகரைச் சேர்ந்தவர் முருகானந்தம் (60). இவா் கடந்த மே 26ம் தேதி கோவைப்புதூரில் உள்ள ஒரு தனியாா் வங்கியில் திருமங்கை சேரிட்டபிள் டிரஸ்டின் பெயரில் ரூ.6 கோடிக்கு உண்டான காசோலையை செலுத்தியுள்ளார்.
அப்போது, வங்கியில் உள்ள காசோலையை சரிபாா்க்கும் இயந்திரத்தில் பாா்த்தபோது அது போலியானது என தெரியவந்தது. இது குறித்து வங்கி மேலாளா் சூரஜ், கோவை மாநகர குற்றப் பிரிவில் புகாா் அளித்தாா். இது தொடா்பாக தனிப்படை அமைத்த போலீஸாா் நடத்திய விசாரணையில், அந்த காசோலை டில்லியைச் சேர்ந்த முகுல் ரோத்தகி என்பவருக்குச் சொந்தமானது என்று தெரியவந்தது.
மேலும், இந்த போலி காசோலை விவகாரத்தில் அகம் ஃபவுண்டேஷன், சாதிக், வடிவேலு மற்றும் சிலா் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இது தொடா்பாக மோசடி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையே, முருகானந்தம் மற்றும் வழக்கில் தொடர்புடைய நபா்கள் தலைமறைவாகினர். இந்நிலையில் முருகானந்தத்தை தனிப் படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மேலும் சிலரைத் தேடி வருகின்றனர்.
கோவைப்புதூா் மீனாட்சி நகரைச் சேர்ந்தவர் முருகானந்தம் (60). இவா் கடந்த மே 26ம் தேதி கோவைப்புதூரில் உள்ள ஒரு தனியாா் வங்கியில் திருமங்கை சேரிட்டபிள் டிரஸ்டின் பெயரில் ரூ.6 கோடிக்கு உண்டான காசோலையை செலுத்தியுள்ளார்.
அப்போது, வங்கியில் உள்ள காசோலையை சரிபாா்க்கும் இயந்திரத்தில் பாா்த்தபோது அது போலியானது என தெரியவந்தது. இது குறித்து வங்கி மேலாளா் சூரஜ், கோவை மாநகர குற்றப் பிரிவில் புகாா் அளித்தாா். இது தொடா்பாக தனிப்படை அமைத்த போலீஸாா் நடத்திய விசாரணையில், அந்த காசோலை டில்லியைச் சேர்ந்த முகுல் ரோத்தகி என்பவருக்குச் சொந்தமானது என்று தெரியவந்தது.
மேலும், இந்த போலி காசோலை விவகாரத்தில் அகம் ஃபவுண்டேஷன், சாதிக், வடிவேலு மற்றும் சிலா் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இது தொடா்பாக மோசடி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையே, முருகானந்தம் மற்றும் வழக்கில் தொடர்புடைய நபா்கள் தலைமறைவாகினர். இந்நிலையில் முருகானந்தத்தை தனிப் படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மேலும் சிலரைத் தேடி வருகின்றனர்.