திருப்பூர்: திமுக அரசு பாரபட்சமற்ற மதசார்பற்ற அரசாக இருக்க வேண்டும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருப்பூர்: திமுக அரசு பாரபட்சமற்ற மதசார்பற்ற அரசாக இருக்க வேண்டும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருப்பூர் கரட்டங்கடுவில் உள்ள பாஜக பொதுச் சேவை மையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியதாவது;
கொரோனா காலத்தில் திமுக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. . நல்லது செய்யும் பட்சத்தில் அதனை இந்து முன்னணி வரவேற்கும். கோவிலுக்கு சொந்தமான சொத்துகள் இணையதளத்தில் வெளியிடப்படும் என்ற அறநிலையத்துறை அமைச்சரின் அறிவிப்பை வரவேற்கிறோம்.
ஆக்கிரமித்தவர்களின் பெயரையும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். தமிழில் அர்ச்சனை, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அறிவிப்பும் வரவேற்கத்தக்கது.
கோயில்களின் ஆகம விதிகளின்படி செயல்பட வேண்டும். திமுக அரசு பாரபட்சமற்ற மதசார்பற்ற அரசாக இருக்க வேண்டும். மசூதி, சர்ச்சுகள் இடங்களையும் அரசு கையகப்படுத்தி, அங்கும் தமிழ் வழியில் வழிபாடு நடத்த உத்தரவிட வேண்டும்.” இவ்வாறு காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.
திருப்பூர் கரட்டங்கடுவில் உள்ள பாஜக பொதுச் சேவை மையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியதாவது;
கொரோனா காலத்தில் திமுக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. . நல்லது செய்யும் பட்சத்தில் அதனை இந்து முன்னணி வரவேற்கும். கோவிலுக்கு சொந்தமான சொத்துகள் இணையதளத்தில் வெளியிடப்படும் என்ற அறநிலையத்துறை அமைச்சரின் அறிவிப்பை வரவேற்கிறோம்.
ஆக்கிரமித்தவர்களின் பெயரையும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். தமிழில் அர்ச்சனை, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அறிவிப்பும் வரவேற்கத்தக்கது.
கோயில்களின் ஆகம விதிகளின்படி செயல்பட வேண்டும். திமுக அரசு பாரபட்சமற்ற மதசார்பற்ற அரசாக இருக்க வேண்டும். மசூதி, சர்ச்சுகள் இடங்களையும் அரசு கையகப்படுத்தி, அங்கும் தமிழ் வழியில் வழிபாடு நடத்த உத்தரவிட வேண்டும்.” இவ்வாறு காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.