கோவை: கிணத்துக்கடவில் பிறந்த நாள் புத்தாடை வாங்க வைத்திருந்த பணத்தை கொரோனா நிதிக்கு வழங்கிய சிறுவனின் செயல் நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கிணத்துக்கடவில் பிறந்த நாள் புத்தாடை வாங்க வைத்திருந்த பணத்தை கொரோனா நிதிக்கு வழங்கிய சிறுவனின் செயல் நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிணத்துக்கடவு அண்ணாநகர் பகுதியில் வசிப்பவர் பிரதீப்குமார், இவரது மகன் ஹர்ஷவர்தன், ஆறாம் வகுப்பு படித்து வரும் இந்த சிறுவன் இன்று 11ம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாடினார்.

தனது பிறந்தநாளுக்கு புத்தாடை வாங்க வைத்திருந்த 2 ஆயிரம் ரூபாயை இன்று முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கினார்.

கிணத்துக்கடவு பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்ட தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியிடம் கொரோனா நிவாரண நிதிக்கான பணத்தை ஹர்ஷ்வர்த்தன் வழங்கினார்.
தனது விருப்பத்தை விடவும் பொது நலனை கருத்தில் கொண்டு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 2ஆயிரம் ரூபாய் வழங்கிய சிறுவனின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
கிணத்துக்கடவு அண்ணாநகர் பகுதியில் வசிப்பவர் பிரதீப்குமார், இவரது மகன் ஹர்ஷவர்தன், ஆறாம் வகுப்பு படித்து வரும் இந்த சிறுவன் இன்று 11ம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாடினார்.
தனது பிறந்தநாளுக்கு புத்தாடை வாங்க வைத்திருந்த 2 ஆயிரம் ரூபாயை இன்று முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கினார்.
கிணத்துக்கடவு பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்ட தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியிடம் கொரோனா நிவாரண நிதிக்கான பணத்தை ஹர்ஷ்வர்த்தன் வழங்கினார்.
தனது விருப்பத்தை விடவும் பொது நலனை கருத்தில் கொண்டு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 2ஆயிரம் ரூபாய் வழங்கிய சிறுவனின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.