தினம் 4 பேர் என சிக்காரம்பாளையம் ஊராட்சியில் 80 கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு..!

கோவை: மேட்டுப்பாளையம் அருகே சிக்காரரம்பாளையம் ஊராட்சியில், தினந்தோறும் நான்கு பேர் என மொத்தம் 80 கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.


கோவை: மேட்டுப்பாளையம் அருகே சிக்காரரம்பாளையம் ஊராட்சியில், தினந்தோறும் நான்கு பேர் என மொத்தம் 80 கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் கடந்த ஒன்றரை மாதமாக கொரோனா பெருந்தொற்று அதிகளவில் இருந்து வருகிறது. இந்தநிலையில், தமிழகத்தில் கடந்த மே மாதம் ஏழாம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் வேலைக்கு செல்ல முடியாமல் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கிப் போய் உள்ளனர். இதனால் மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்ட சிக்காரம்பாளையம் ஊராட்சியில் தலைவர் ஞானசேகரன் ஊராட்சிக்குட்பட்ட மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றார்.



இதன் ஒருபகுதியாக ஊராட்சியில் வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ள 80 கர்ப்பிணி பெண்களுக்கு கண்ணார்பாளையம் அரசு பள்ளியில் இன்று வளைகாப்பு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துள்ளார். இதன்படி முதல்கட்டமாக தினசரி 4 பேருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.



இந்தநிகழ்ச்சியில் ஊராட்சியின் உறுப்பினர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களின் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து ஊராட்சித் தலைவர் ஞானசேகரன், கூறுகையில்: ‘‘கொரோனா பொதுமுடக்கத்தால் அனைத்துத் தரப்பு மக்களும் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். இந்தநிலையில், கர்ப்பிணியாக உள்ள ஏழை பெண்களுக்கு சீமந்தம் நடத்த முடியாத நிலையில் சிலர் உள்ளனர். அவர்களை மகிழ்விக்க அவர்களில் ஒருவனாக நான் இதனை செய்து வருகி்றேன்'' என்று கூறினார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...