மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வேண்டி கோவை காட்மா சங்கம் கோரிக்கை மனு..!

கோவை: தொழில் முனைவோர் தங்கள் மின் உபயோக கட்டணத்தை செலுத்த கால அவகாசம் வேண்டி தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் ஆகியோருக்கு கோவை காட்மா சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.


கோவை: தொழில் முனைவோர் தங்கள் மின் உபயோக கட்டணத்தை செலுத்த கால அவகாசம் வேண்டி தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் ஆகியோருக்கு கோவை காட்மா சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.

மின்‌ கட்டணம்‌ செலுத்த கால அவகாசம்‌ வேண்டுதல்‌ தொடர்பாக காட்மா சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், ‘‘கடந்த 10.05.21 முதல்‌ தமிழக அரசால்‌ அமல்படுத்தப்பட்டுள்ள கொரோனா இரண்டாம்‌ அலை தடுப்பு ஊரடங்கு உத்தரவிற்கு ஆதரவு அளிக்கும்‌ விதமாக கோவை மாவட்டத்தில்‌ உள்ள குறு மற்றும்‌ சிறு தொழிற்‌ கூடங்கள்‌ மூடப்பட்டுள்ளன. மூடப்பட்டுள்ள தொழிற்கூடங்களுக்கான மின்‌ கட்டணம்‌ செலுத்த கால அவகாசம்‌ வழங்கி தமிழக அரசால்‌ உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில்‌, கோவை மற்றும்‌ சுற்று வட்டாரப் பகுதிகளில்‌ உள்ள தொழில்‌ கூடங்களுக்கான, ஏப்ரல்‌ மற்றும்‌ மே மாதத்திற்கான மின்‌ உபயோக கட்டணத்தை வரும்‌ 15.06.21 க்குள்‌ செலுத்திவிட வேண்டும்‌ என்று தமிழ்நாடு மின்‌ உற்பத்தி மற்றும்‌ மின்‌ பகிர்மான கழகத்தால்‌ தொழில்‌ முனைவோர்களுக்கு குறுந்தகவல்கள்‌ அனுப்பப்படுகிறது.

கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுவதால்‌, தொழில்‌ முனைவோர்‌ தங்கள்‌ தொழிலை செய்ய இயலாமல்‌ பொருளாதார ரீதியாகவும்‌, உளவியல்‌ ரீதியாகவும்‌ கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும்‌ இந்தச் சூழலில்‌ தொழில்‌ முனைவோர்களுக்கு இது மிகுந்த நெருக்கடியை உண்டாக்குவதாக இருக்கிறது.

எனவே, தொழில்‌ முனைவோர்‌ தங்கள்‌ மின்‌ உபயோகக் கட்டணத்தை செலுத்த ஊரடங்கு தளர்த்தப்பட்டதற்குப் பிறகு, அதிலிருந்து மூன்று மாதங்கள்‌ கால அவகாசம்‌ வழங்கி, தொழில்‌ முனைவோர்களை இந்த நெருக்கடியில்‌ இருந்து காப்பாற்றி உதவுமாறு பணிவன்புடன்‌ வேண்டிக்‌ கொள்கிறோம்‌'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...