கோவை: கோவை மாநகர் கிழக்கு மாவட்டம், எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் நடைபெற்ற நகர்நலச் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில், நகர்நலச் சங்கம் சார்பாக நிர்வாகிகள் கொரோனா தடுப்பு நிவாரணத்துக்காக ஐம்பதாயிரம் ரூபாய் நிதி அளித்தனர்.
கோவை: கோவை மாநகர் கிழக்கு மாவட்டம், எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் நடைபெற்ற நகர்நலச் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில், நகர்நலச் சங்கம் சார்பாக நிர்வாகிகள் கொரோனா தடுப்பு நிவாரணத்துக்காக ஐம்பதாயிரம் ரூபாய் நிதி அளித்தனர்.
கோவை மாநகர் கிழக்கு மாவட்டம், 66வது வார்டு, எம்.ஜி.ஆர்.நகர் (கிருஷ்ணா காலனி) பகுதியில் நடைபெற்ற, நகர்நலச் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில், கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான நா.கார்த்திக் கலந்து கொண்டார்.
இக்கூட்டத்தில் கொரோனா பெருந்தொற்று நோய் தடுப்பு நிவாரண உதவியாக 50,000 ரூபாய் காசோலையை நகர்நலச் சங்க நிர்வாகிகள் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக்கிடம் வழங்கினர்.

உடன் மாவட்டப் பொறுப்புக்குழு உறுப்பினர் மா.செல்வராஜ், பீளமேடு பகுதிக்கழகம்-3 பொறுப்பாளர் இரா.சேரலாதன், 66வது வட்டக் கழகப் பொறுப்பாளர்கள் இரா.செந்தில், இளங்கோ மற்றும் சேதுபதி, கனகராஜ், பிரபு, தாமோதரன், கார்த்தி, கழக நிர்வாகிகள், நகர்நலச் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.