கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த மே மாதம் 1026 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது 795 பகுதிகள் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்தார்.
கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த மே மாதம் 1026 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது 795 பகுதிகள் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்றுப் பரவல் கடந்த சில நாட்களாகக் குறைந்து கொண்டே வருகிறது. தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3000-க்கும் கீழ் சென்றுள்ளது. கொரோனா பெருந்தொற்றுப் பரவலைத் தடுக்க மாநகராட்சி சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், மாநகராட்சியில் மருத்துவ முகாம், பரிசோதனைகள் அதிகரிப்பு, வீடுகள் தனிமைப்படுத்தல் உள்பட பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி அதிகாரிகளுடன் சுகாதாரத் துறையினர் மேற்கொண்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் சார்பாக கொரோனா பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த ஊரகப் பகுதிகளில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கோவை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்றுக் கண்டறியப்படும் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், தெருக்களில் 3 வீடுகளுக்கு மேல் இருந்தால் அந்த வீதி தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் தற்போது 795 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 580 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்பிறகு துடியலூரில் 48 பகுதிகளும், காரமடையில் 37 பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டத்திலேயே குறைவாக கிணத்துக்கடவில் எந்தப் பகுதியும் தனிமைப்படுத்தப்படவில்லை. தொடர்ந்து நோய்த் தொற்றுப் பரவல் குறைந்து வரும் நிலையில், பொதுமக்கள் பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்' என்றார்.
கோவை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்றுப் பரவல் கடந்த சில நாட்களாகக் குறைந்து கொண்டே வருகிறது. தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3000-க்கும் கீழ் சென்றுள்ளது. கொரோனா பெருந்தொற்றுப் பரவலைத் தடுக்க மாநகராட்சி சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், மாநகராட்சியில் மருத்துவ முகாம், பரிசோதனைகள் அதிகரிப்பு, வீடுகள் தனிமைப்படுத்தல் உள்பட பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி அதிகாரிகளுடன் சுகாதாரத் துறையினர் மேற்கொண்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் சார்பாக கொரோனா பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த ஊரகப் பகுதிகளில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கோவை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்றுக் கண்டறியப்படும் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், தெருக்களில் 3 வீடுகளுக்கு மேல் இருந்தால் அந்த வீதி தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் தற்போது 795 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 580 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்பிறகு துடியலூரில் 48 பகுதிகளும், காரமடையில் 37 பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டத்திலேயே குறைவாக கிணத்துக்கடவில் எந்தப் பகுதியும் தனிமைப்படுத்தப்படவில்லை. தொடர்ந்து நோய்த் தொற்றுப் பரவல் குறைந்து வரும் நிலையில், பொதுமக்கள் பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்' என்றார்.