வால்பாறையில் அரசு மருத்துவமனையில் அமைந்துள்ள ஆக்சிசன் உற்பத்தி நிலையத்தை உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ துவங்கி வைத்தார்!

கோவை: வால்பாறையில் அரசு மருத்துவமனையில் அமைந்துள்ள ஆக்சிசன் உற்பத்தி நிலையத்தை சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தனர்.


கோவை: வால்பாறையில் அரசு மருத்துவமனையில் அமைந்துள்ள ஆக்சிசன் உற்பத்தி நிலையத்தை சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில், தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் நலன் கருதி அவர்களுக்கு திமுக சார்பாக நிவாரண வழங்கும் நிகழ்ச்சிக்கும், வால்பாறை பகுதியில் கொரோனா சிகிச்சை மையம் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள எடுத்து அதற்குத் தேவையான ஆக்சிஜனை உற்பத்தி நிலையம் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அதற்கு தேவையான நிதியை நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் அவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து 30 லட்சம் வழங்கி அரசு மருத்துவமனையில் ஆக்சிசன் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், அதனை திறந்து வைப்பதற்காக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர்கள் மற்றும் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் அவர்கள் வால்பாறைக்கு வருகை தந்தனர்.



அப்போது, தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சுமார் 120 டோக்கன்கள் வழங்கி, அதற்கு தேவையான அரிசி பருப்பு சர்க்கரை மற்றும் எண்ணெய், உப்பு போன்ற உணவு பொருள்களை வால்பாறையில் பொது மக்களுக்கு துவங்கி வைத்தனர்.



பின்னர், வால்பாறையில் அரசு மருத்துவமனையில் அமைந்துள்ள ஆக்சிசன் உற்பத்தி நிலையத்தை ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார்.



இந்நிகழ்வில் கோவை மாவட்ட தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், வால்பாறை பொறுப்பாளர் பால்பாண்டி, முன்னாள் நகர மன்ற தலைவர் கோழிக்கடை கணேசன், வர்த்தக அணி துணை பொறுப்பாளர் விஜயபாஸ்கர், மகுடீஸ்வரன், கிருஷ்ணமூர்த்தி, வட கடைக்குட்டி, முன்னாள் கவுன்சிலர் சுதாகர், முன்னாள் கவுன்சிலர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...