கோவை: தன்னார்வலர்கள் ஆக்சிஜன் மீட்டர் உள்ளிட்ட கருவிகள் வழங்கி உதவும்படி பொள்ளாச்சி சார் ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவை: தன்னார்வலர்கள் ஆக்சிஜன் மீட்டர் உள்ளிட்ட கருவிகள் வழங்கி உதவும்படி பொள்ளாச்சி சார் ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் கிராமப்புறங்களில் நோய் தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், பேரூராட்சி பகுதிகளில் நோய் தொற்றை கட்டுப்படுத்த பொள்ளாச்சி சார்-ஆட்சியர் வைத்திநாதன் கோவை மாவட்டத்தில் பேரூராட்சிகள் சிறப்பு கண்காணிப்பு அதிகாரியாக கூடுதல் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் உள்ள 37 பேரூராட்சிகளில் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு கொரோனா நோய் பாதிப்புகள் உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொரோனா தொற்று பாதிப்புகளை கண்டறியும், ஆக்சிஜன் மீட்டர், உடல் வெப்ப பரிசோதனை கருவி உள்ளிட்ட பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில், தன்னார்வலர்கள் மற்றும் ஊர்க்காவல் படை ஊழியர்களுடனான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டத்தில், பேசிய சார் ஆட்சியர் வைத்திநாதன், கோவை மாவட்டத்தில் உள்ள 37 பேரூராட்சிகளிலும் நோய்த் தொற்றை கண்டறிய, 3000 ஆக்சிஜன் மீட்டர் , தர்மோ மீட்டர் உள்ளிட்ட கருவிகள் தேவைப்படுகிறது.
கோவையை சேர்ந்த சந்திரசேகர் மற்றும் ரவீந்திரன் ஆகிய இரண்டு தன்னார்வலர்கள் 100 ஆக்சிஜன் மீட்டர்களை வழங்கியுள்ளனர்.

உடனடியாக பணிகளை தொடங்க இன்னும் கருவிகள் தேவைப்படுவதால், தன்னார்வலர்கள் முன்வந்து உதவ வேண்டும்,” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் கிராமப்புறங்களில் நோய் தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், பேரூராட்சி பகுதிகளில் நோய் தொற்றை கட்டுப்படுத்த பொள்ளாச்சி சார்-ஆட்சியர் வைத்திநாதன் கோவை மாவட்டத்தில் பேரூராட்சிகள் சிறப்பு கண்காணிப்பு அதிகாரியாக கூடுதல் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் உள்ள 37 பேரூராட்சிகளில் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு கொரோனா நோய் பாதிப்புகள் உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொரோனா தொற்று பாதிப்புகளை கண்டறியும், ஆக்சிஜன் மீட்டர், உடல் வெப்ப பரிசோதனை கருவி உள்ளிட்ட பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில், தன்னார்வலர்கள் மற்றும் ஊர்க்காவல் படை ஊழியர்களுடனான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்தில், பேசிய சார் ஆட்சியர் வைத்திநாதன், கோவை மாவட்டத்தில் உள்ள 37 பேரூராட்சிகளிலும் நோய்த் தொற்றை கண்டறிய, 3000 ஆக்சிஜன் மீட்டர் , தர்மோ மீட்டர் உள்ளிட்ட கருவிகள் தேவைப்படுகிறது.
கோவையை சேர்ந்த சந்திரசேகர் மற்றும் ரவீந்திரன் ஆகிய இரண்டு தன்னார்வலர்கள் 100 ஆக்சிஜன் மீட்டர்களை வழங்கியுள்ளனர்.
உடனடியாக பணிகளை தொடங்க இன்னும் கருவிகள் தேவைப்படுவதால், தன்னார்வலர்கள் முன்வந்து உதவ வேண்டும்,” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.