கோவை: கோவை மாநகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் ஆக்சிஜன் அளவைக் கண்டறியும் பணியில் 4 ஆயிரத்து 500 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர் என மாநகராட்சி அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை மாநகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் ஆக்சிஜன் அளவைக் கண்டறியும் பணியில் 4 ஆயிரத்து 500 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர் என மாநகராட்சி அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் தற்போது 1 லட்சத்து 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்களில், 1 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து உள்ளனர். கோவை மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கோவை மாநகராட்சியில் ஒரு வீதியில் 3 பேருக்கு மேல் தொற்று உறுதி செய்யப்பட்டால், அந்த வீதி தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, மாநகராட்சி பகுதியில் 651 தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: ‘‘கோவை மாநகராட்சி பகுதியில் கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த வீடு, வீடக்ச் சென்று சளி, காய்ச்சல் பரிசோதனை செய்வதுடன், பொதுமக்களின் ஆக்சிஜன் அளவைக் கண்டறியும் பணியில் 4 ஆயிரத்து 500 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இது கடந்த ஆண்டை விட அதிகம்.
இவர்களில் ஒரு நபர் குறைந்தது 50 வீடுகளில் சோதனை மேற்கொள்வார். சளி, காய்ச்சல் உள்ளவர்களுக்கு உடனடியாக கொரோனா பரிசோதனை செய்யப்படும். இதன் முடிவுகளை 24 மணி நேரத்திற்குள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், 14 நாட்களுக்கு வெளியே வரக்கூடாது என்று கண்டிப்பாகத் தெரிவித்து உள்ளோம். அவர்களைக் கண்காணிக்கும் பணியில் மநாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்'' என்று தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில் தற்போது 1 லட்சத்து 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்களில், 1 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து உள்ளனர். கோவை மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கோவை மாநகராட்சியில் ஒரு வீதியில் 3 பேருக்கு மேல் தொற்று உறுதி செய்யப்பட்டால், அந்த வீதி தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, மாநகராட்சி பகுதியில் 651 தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: ‘‘கோவை மாநகராட்சி பகுதியில் கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த வீடு, வீடக்ச் சென்று சளி, காய்ச்சல் பரிசோதனை செய்வதுடன், பொதுமக்களின் ஆக்சிஜன் அளவைக் கண்டறியும் பணியில் 4 ஆயிரத்து 500 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இது கடந்த ஆண்டை விட அதிகம்.
இவர்களில் ஒரு நபர் குறைந்தது 50 வீடுகளில் சோதனை மேற்கொள்வார். சளி, காய்ச்சல் உள்ளவர்களுக்கு உடனடியாக கொரோனா பரிசோதனை செய்யப்படும். இதன் முடிவுகளை 24 மணி நேரத்திற்குள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், 14 நாட்களுக்கு வெளியே வரக்கூடாது என்று கண்டிப்பாகத் தெரிவித்து உள்ளோம். அவர்களைக் கண்காணிக்கும் பணியில் மநாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்'' என்று தெரிவித்தார்.