நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் காட்டு யானை தாக்கி ஆதிவாசி இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் காட்டு யானை தாக்கி ஆதிவாசி இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி செம்மணாரை ஆதிவாசி கிராமத்தில் வசித்து வருபவர் இருளர் இனத்தை சேர்ந்த இளைஞர் ராஜ்குமார்.
இவர் அருகில் உள்ள தல மொக்கை கோவிலுக்கு சென்று விட்டு செம்மணாரையில் உள்ள அவரது வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது புதரில் மறைந்திருந்த காட்டு யானை அவரை தாக்கியுள்ளது. இதில் தலை, இடுப்பு, பகுதிகளில் பலத்த காயமடைந்த ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்த வனத்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.

இறந்தவரின் குடும்பத்திற்கு வனத்துறை சார்பில் முதற்கட்டமாக ரூ.50,000 நிதி உதவி வழங்கப்பட்டது. யானை தாக்கி இளைஞர் இறந்த சம்பவம் ஆதிவாசி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி செம்மணாரை ஆதிவாசி கிராமத்தில் வசித்து வருபவர் இருளர் இனத்தை சேர்ந்த இளைஞர் ராஜ்குமார்.
இவர் அருகில் உள்ள தல மொக்கை கோவிலுக்கு சென்று விட்டு செம்மணாரையில் உள்ள அவரது வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது புதரில் மறைந்திருந்த காட்டு யானை அவரை தாக்கியுள்ளது. இதில் தலை, இடுப்பு, பகுதிகளில் பலத்த காயமடைந்த ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்த வனத்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.
இறந்தவரின் குடும்பத்திற்கு வனத்துறை சார்பில் முதற்கட்டமாக ரூ.50,000 நிதி உதவி வழங்கப்பட்டது. யானை தாக்கி இளைஞர் இறந்த சம்பவம் ஆதிவாசி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.