சொத்துவரி செலுத்தாத தொழிற்சாலையின் முன்பு குப்பைத்தொட்டி வைத்து மாநகராட்சி நடவடிக்கை

மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின்படி, கோவை மாநகராட்சி ராஜராஜேஸ்வரி நகரில் வசிக்கும் ராஜாராம் என்பவர் சொத்துவரி செலுத்தாதைத் தொடர்ந்து அவரது தொழிற்சாலையின் முன்புறம் குப்பைத்தொட்டி வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி பகுதியில் சொத்துவரி, குடிநீர் வரி உள்ளிட்டவற்றை செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கோவை தெற்கு மண்டலம் வார்டு எண் 76, ராஜராஜேஸ்வரி நகரில் வசித்து வரும் ராஜாராம், என்பவர் வரிவிதிப்பு எண் - 76136004, 2016- 17-ம் ஆண்டு சொத்து வரி நிலுவை ரூ.15 ஆயிரத்து 980 மற்றும் வரிவிதிப்பு எண் - 76136005, 2016- 17-ம் ஆண்டு சொத்து வரி நிலுவை ரூ.9 ஆயிரத்து 196 என மொத்தம் 25 ஆயிரத்து 176 ரூபாய் சொத்துவரி நிலுவைத் தொகையினை செலுத்தாமல் இருந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, அவரது தொழிற்சாலையின் முன்பு குப்பைத் தொட்டி வைக்குமாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவரது தொழிற்சாலையின் முன்புறம் குப்பைத்தொட்டி வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...