கோவை: கோவை வழக்கறிஞர்கள் வரும் 30ம் தேதிக்குள் நோட்டரி பப்ளிக் அங்கீகாரம் பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை வழக்கறிஞர்கள் வரும் 30ம் தேதிக்குள் நோட்டரி பப்ளிக் அங்கீகாரம் பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை சேர்ந்த வக்கீல்கள், மத்திய அரசு நோட்டரி பப்ளிக் அங்கீகாரம் பெறுவதற்கு, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சட்டப்படிப்பு முடித்து, பார் கவுன்சிலில் பதிவு செய்தவர்கள், ஏழு ஆண்டுகள் நீதிமன்றத்தில் வழக்கு நடத்திய அனுபவம் இருந்தால், நோட்டரி பப்ளிக் அங்கீகாரம் பெற விண்ணப்பிக்கலாம். மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில், நோட்டரி அங்கீகாரம் அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், மத்திய நோட்டரி பப்ளிக் நியமனம் தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம் பதிவாளர் அலுவலகம் அறிவித்துள்ளது. மாவட்ட நீதித்துறை நிர்வாகம் நோட்டீஸ் போர்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, https://legalaffairs.gov.in/notary-cell என்ற இணையதளத்திலும் பார்க்கலாம். ஆன்லைன் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க, வரும் 30ம் தேதி கடைசி நாளாகும்.