கோவை: ஆனைமலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்த போலீசார், 1250 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
கோவை: ஆனைமலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்த போலீசார், 1250 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில், கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆனைமலை காவல்நிலைய உதவி ஆய்வாளர் கருப்பசாமிபாண்டியன் தலைமையில், ஆனைமலை எல்.ஆர்.டி பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த இரண்டு இரு சக்கர வாகனங்களை நிறுத்தி விசாரணை மேற்கொண்டதில், இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள், ஆனைமலை பகுதியைச் சேர்ந்த பாபு என்கிற சாந்து முகமது, கோகுலகிருஷ்ணன் மற்றும் கோயில் பாளையத்தை சேர்ந்த பிரபாகரன், சரவணகுமார், பிரகாஷ் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், இருசக்கர வாகனத்தை சோதனையிட்ட போது, அதில் சுமார் 1250 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, 5 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த கஞ்சா, ரூ.5,500 பணம், மொபைல் போன்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில், கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆனைமலை காவல்நிலைய உதவி ஆய்வாளர் கருப்பசாமிபாண்டியன் தலைமையில், ஆனைமலை எல்.ஆர்.டி பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த இரண்டு இரு சக்கர வாகனங்களை நிறுத்தி விசாரணை மேற்கொண்டதில், இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள், ஆனைமலை பகுதியைச் சேர்ந்த பாபு என்கிற சாந்து முகமது, கோகுலகிருஷ்ணன் மற்றும் கோயில் பாளையத்தை சேர்ந்த பிரபாகரன், சரவணகுமார், பிரகாஷ் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், இருசக்கர வாகனத்தை சோதனையிட்ட போது, அதில் சுமார் 1250 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, 5 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த கஞ்சா, ரூ.5,500 பணம், மொபைல் போன்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.