கோவையில் சிறுமியை பலாத்காரம் செய்து சீரழித்த சித்தப்பா உள்ளிட்ட இரண்டு நபர்கள் கைது..!

கோவை: கோவையில் சிறுமியை பலாத்காரம் செய்து சீரழித்த சித்தப்பா உள்ளிட்ட இரண்டு நபர்களை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீஸார் கைது செய்தனர்.



கோவை: கோவையில் சிறுமியை பலாத்காரம் செய்து சீரழித்த சித்தப்பா உள்ளிட்ட இரண்டு நபர்களை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீஸார் கைது செய்தனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நெல்லித்துறை பகுதியில் 14 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். இந்தச் சிறுமி அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்தநிலையில், அடிக்கடி குடித்துவிட்டு வரும் சிறுமியின் சித்தப்பாவான முருகேசன் என்பவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து சிறுமி வேலை பார்க்கும் இடத்தில் டைல்ஸ் ஒட்டும் பணிபுரிந்த சம்பத் என்ற வாலிபரும் சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனால் அந்தச் சிறுமி இரண்டு மாதம் கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அந்தப் புகாரின்படி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அவரது சித்தப்பா முருகேசன் மற்றும் தொழிலாளியான சம்பத் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...