கோவை: கோவை அருகே தூய்மைப் பணியாளர்கள் பயணித்த பேட்டரி கார் விபத்துக்குள்ளானதில் 2 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார் 7 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவை: கோவை அருகே தூய்மைப் பணியாளர்கள் பயணித்த பேட்டரி கார் விபத்துக்குள்ளானதில் 2 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார் 7 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது;
இன்று மதியம் 1.40 மணி அளவில் இக்கரை போளுவம்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட துப்புரவு பணியாளர்கள் 9 பேர் பணியை முடித்துவிட்டு அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பேட்டரி வண்டியில் சென்று கொண்டிருந்தனர்.

இக்கரை போளுவம்பட்டியில் உள்ள பாலத்தில் செல்லும் போது பேட்டரி வண்டி வலது பக்கமாக தலைகீழாக சாய்ந்ததில் இக்கரை போளுவாம்பட்டியை சேர்ந்த பழனி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் கோவை அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் செம்மேடு, காந்தி காலனியைச் சேர்ந்த மருதன் மகன் பழனிச்சாமி என்பவர் உயிரிழந்தார்.
ராசு, பெரியசாமி, மாரிமுத்து, அம்மாசை, செல்வி, மாரிமுத்து, கமலம், அருக்காணி ஆகிய ஏழு பேரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு போலீசார் கூறினர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது;
இன்று மதியம் 1.40 மணி அளவில் இக்கரை போளுவம்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட துப்புரவு பணியாளர்கள் 9 பேர் பணியை முடித்துவிட்டு அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பேட்டரி வண்டியில் சென்று கொண்டிருந்தனர்.
இக்கரை போளுவம்பட்டியில் உள்ள பாலத்தில் செல்லும் போது பேட்டரி வண்டி வலது பக்கமாக தலைகீழாக சாய்ந்ததில் இக்கரை போளுவாம்பட்டியை சேர்ந்த பழனி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் கோவை அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் செம்மேடு, காந்தி காலனியைச் சேர்ந்த மருதன் மகன் பழனிச்சாமி என்பவர் உயிரிழந்தார்.
ராசு, பெரியசாமி, மாரிமுத்து, அம்மாசை, செல்வி, மாரிமுத்து, கமலம், அருக்காணி ஆகிய ஏழு பேரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு போலீசார் கூறினர்.